
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, ஆஸ்திரியாவில் உள்ள பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனமான KTM-இல் அதிகபட்ச பங்குகளை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தக் கொள்முதல் நடவடிக்கை, பஜாஜ் கடந்த காலங்களில் KTM-க்கு வழங்கிய ₹7,769 கோடி அளவிலான பங்குதாரர் கடனை மறுசீரமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் KTM நிறுவனத்தின் நிதி நிலை தக்கவைக்கப்படவுள்ளது.
தற்போது பஜாஜ் ஆட்டோ, பியர்ர் மொபிலிட்டி AG நிறுவனத்தில் 37.5% பங்குகளை வைத்துள்ளது. இந்த நிறுவனமே KTM, Husqvarna, GasGas போன்ற பிராண்டுகளை நியமித்து செயல்படுத்தும் நிறுவனம். மேலும், பஜாஜ் தனது உடைமையிலுள்ள Bajaj Auto International Holdings நிறுவனத்தின் மூலம் Pierer Bajaj AG-யில் 49.9% பங்குகளை வைத்துள்ளது. மீதமுள்ள பங்குகள் ஸ்டீபன் பியர்ருக்கு சொந்தமான Pierer Industries AG நிறுவனத்திற்கு சொந்தமானவை.
இந்த புதிய முதலீட்டு திட்டத்தின் கீழ் பஜாஜ் ஆட்டோ, மேலும் ₹5,827 கோடி அளவிலான முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. இதில்,
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் Pierer Bajaj AG நிறுவனத்தில் பஜாஜ் ஆட்டோவின் முழுமையான கட்டுப்பாட்டை உறுதி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த takeover ஒப்பந்தம், பின்வரும் படிகள் மற்றும் அனுமதிகளை பெற்று நிறைவேற்றப்பட வேண்டும்:
இந்த ஒத்துழைப்பு வாயிலாக பஜாஜ் மற்றும் KTM இடையேயான பிணைப்பு வலுப்பெற்று, இருவருக்கும் நீண்டகால வளர்ச்சி, பங்கு மதிப்பு உயர்வு, மற்றும் புதிய தொழில்நுட்ப மேம்பாடுகள் கிடைக்கும். இது சர்வதேச சந்தையில் பஜாஜ் ஆட்டோவின் நிலையை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.