Oct 10 Today Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இன்று ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்து வையுங்கள்.!

Published : Oct 09, 2025, 05:20 PM IST
thulam rasi

சுருக்கம்

Today Rasi Palan : அக்டோபர் 10, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

பொதுவான பலன்கள்:

  • துலாம் ராசி நேயர்களே, இன்று பொறுமை மற்றும் நிதானம் தேவைப்படும் நாள். அவசர முடிவுகளை தவிர்க்கவும். 
  • நீங்கள் இத்தனை நாட்களாக உங்கள் மனதில் வருத்திக் கொண்டிருந்த கவலைகளை விட்டு விடுங்கள். 
  • இது உங்கள் மனதிலும் இதயத்திலும் புதிய உற்சாகத்தை கொண்டு வரும். 
  • சிறிய வெற்றிகள் அல்லது சிறிய செயல்களுக்கும் உங்களை பாராட்டுங்கள். 
  • உங்கள் நேரத்தை வீணடிக்கும் அற்பமான விஷயங்களில் இருந்து விலகி இருங்கள்.

நிதி நிலைமை:

  • இன்றைய நாள் பணத்தை மிச்சப்படுத்த அல்லது எதிர்கால நிதி ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் நாளாகும். 
  • பயன்படும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். 
  • வரவு செலவுகளை சரிபார்த்து, தேவையற்ற செலவுகளை ரத்து செய்து நிதி சமநிலையை கொண்டு வாருங்கள். 
  • குறுக்கு வழியை நாடாமல் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் பாதைகளை தேர்ந்தெடுங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

  • இன்று குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை கலவையான பலன்களே கிடைக்கும். 
  • உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஒருவருக்காக அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து விடுங்கள். 
  • உங்கள் துணையுடன் எல்லாவற்றையும் சரி செய்ய முயற்சிக்காமல் இடைவெளி கொடுப்பது நல்லது. 
  • அமைதியாக இருப்பது சில சமயங்களில் முயற்சியை விட சிறந்ததாக இருக்கும். 
  • நீங்கள் தனிமையில் இருந்தால் உங்களை மதிக்க கூடியவரிடம் மனம் விட்டு பேசுங்கள்.

பரிகாரங்கள்:

  • இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமி தாயாரை வழிபடுங்கள். 
  • துர்க்கை அம்மன் வழிபாடு நன்மைகளைத் தரும். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான ஆதி பராசக்தியை வணங்கலாம். 
  • ஏழை எளியவர்களுக்கு உதவுங்கள். 
  • அன்னதானம் அல்லது பிற தானங்கள் வழங்குவது நற்பலன்களைக் கூட்டும்.

முக்கிய குறிப்பு:

  • இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒட்டக சிலையை வீட்டில் வைப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன?
மார்ச் மாதம் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்.! இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.! செல்வ செழிப்பை அடையப்போறீங்க.!