This Week Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, அடித்து ஆடப்போகும் விருச்சிக ராசி.! தொட்டதெல்லாம் பொன்னாகும்.!

Published : Dec 15, 2025, 03:58 PM IST
Viruchiga Rasi

சுருக்கம்

Viruchiga Rasi This Week Rasi Palan: டிசம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

வார ராசிப்பலன்கள் - விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, இந்த வாரத்தின் தொடக்கத்தில் தன்னம்பிக்கை உயரும். நிலுவையில் இருக்கும் வேலைகளை முடிக்க நல்ல நேரமாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் இரு முறை யோசிப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் சமூகத்தினருடன் நல்லுறவு காணப்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு நின்ற வேலைகள் இந்த வாரம் தீவிர முயற்சியால் முடிவடைய வாய்ப்பு உள்ளது.

நிதி நிலைமை:

இந்த வாரம் நிதி நிலைமை சீராக இருக்கும். எதிர்பாராத பண ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற மற்றும் அனாவசிய செலவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தள்ளிப் போடலாம். சொத்து அல்லது பங்குச்சந்தை தொடர்பான முதலீடுகளில் நிதானம் தேவை. நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்ற பிறகு செயல்படுவது நல்லது. பழைய கடன்களை தீர்ப்பதற்கான வழிகள் பிறக்கும்.

ஆரோக்கியம்:

இந்த வாரம் உங்கள் மன வலிமை மற்றும் ஆற்றல் உயர்வாக இருக்கும். செவ்வாய் பகவானின் நிலை காரணமாக தலைவலி, காய்ச்சல் அல்லது தசை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். சாலைகளில் நடந்து செல்லும் பொழுதும், வாகனம் ஓட்டும் பொழுதும் எச்சரிக்கை தேவை. வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அசுத்தமான அல்லது அதிக காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

கல்வி:

இந்த வாரம் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடின உழைப்பால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஆழமான பாடங்களை படிப்பவர்களுக்கு சாதகமான வாரமாகும். புதிய கண்டுபிடிப்புகள் அல்லது பிற முயற்சிகளின் மூலம் மாணவர்கள் பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்.

தொழில் மற்றும் வியாபாரம்:

பணியிடத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரியான நேரத்தில் முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இருப்பினும் அலுவலக நிர்வாகம் பற்றி சக ஊழியர்களுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும். சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அல்லது எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.

குடும்ப உறவுகள்:

உங்கள் பேச்சில் ஆக்ரோஷம் வெளிப்பட வாய்ப்பு இருப்பதால் குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டியது அவசியம். திருமணமானவர்களுக்கு துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழந்தைகளின் எதிர்காலம் குறித்து புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உறவு வலுப்பெறும்.

பரிகாரம்:

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை வழிபடுவது நன்மை தரும். காஞ்சியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது நல்லது. “ஓம் சரவணபவ:” மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். ரத்த தானம் செய்வது அல்லது ஏழைகளுக்கு ஆடை தானம் செய்வது பலன்களை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

This Week Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, சுக்கிரன் அருளால் இந்த வாரம் கோடியில் புரளும் யோகம் கிடைக்கும்.!
Samsaptak Yoga: 100 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அதிசயம்.! பண மெத்தையில் படுத்து உறங்கப்போகும் 5 ராசிகள்.!