மா சாகுபடியில் விளைச்சலை அதிகரிக்கனுமா? இதை வாசிங்க…

 
Published : Jun 05, 2017, 11:38 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
மா சாகுபடியில் விளைச்சலை அதிகரிக்கனுமா? இதை வாசிங்க…

சுருக்கம்

Will the yield increase in maize? Read this

மா சாகுபடியில் விளைச்சலை அதிகரிக்கும் வழி:

பிப்ரவரி முதல் வாரத்தில் பூ பூக்காத கிளைகளில் 0.5 சத யூரியா கரைசல் (5கிராம் யூரியா 1 லிட்டர் தண்ணீரில் கலந்து) அல்லது பொட்டாசியம் நைட்ரேட் 1.0 சதம் (10கிராம் பொட்டாசியம் நைட்ரேட்டை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து) தெளிப்பதால் 10-15 நாள்களில் கிளைகளில் பூக்கள் தோன்றும்.

பூக்கும் தருணத்தில் என்.ஏ.ஏ என்ற அளவில் வளர்ச்சி ஊக்கி மருந்தை 20பி.பி.எம். என்ற அளவில் (அதாவது 20 மில்லி கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து) இரண்டு முறை, பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், பிஞ்சுகள் மிளகு அளவில் இருக்கும் போது ஒரு முறையும் தெளிப்பதால், பூக்கள் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்புத் தன்மை அதிகரிக்கும்.

இப்படி செய்வதால் மா சாகுபடியில் நல்ல விளைச்சலை அடையலாம்.

PREV
click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!