காடுகளை அழிப்பதால் இவ்வளவு தீங்குகள் நமக்கு வந்து சேரும்...

First Published Jun 25, 2018, 1:35 PM IST
Highlights
What kind of vegetables are you looking for?...


காடுகளை அழிப்பதால் கரியமில வாயு வளிமண்டலத்தில் அதிக அளவு சேரும். இதனால் பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன. 

என்னென்ன விளைவுகள் தெரியுமா?

** அதிக மழை அல்லது வறட்சியால் பயிர் விளைச்சல் பாதிக்கப்படும்.

** குளிர் பிரதேசங்களில் பயிர்களின் வளர்ச்சிப் பருவம் அதிகரிக்கின்றது.

** பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

** அதிக வெப்பம் காரணமாக மண்ணில் அங்ககப் பொருட்களின் சிதைவு துரிதப்பட்டு இதன் அளவு குறைய வாய்ப்புள்ளது.

** கரியமில வாயு அதிகரிப்பதால் உற்பத்தித் திறன் அதிகரித்து பயிர்கள் அதிக அளவு சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளும். இதனால் மண்வளம் குறையலாம்.

** பூமி வெப்பமடைவதால் கொசுவின் வாழ்நாள் மற்றும் இனவிருத்தியின் அளவு அதிகரிக்கிறது. இதனால் மலேரியா பரவுகின்றது.

** பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வளர்வதற்கு உகந்த நிலை ஏற்படுதல் விளைபொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் சேதமடைகின்றன.

** வளிமண்டலத்தின் ஓசோன் படலம் சிதைவதால் தோல் புற்றுநோய்கள் அதிகம் ஏற்படும்.

** அதிக வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகும் நீரினால் கடல்மட்டம் அதிகரிக்கிறது. இது தொடர்ந்தால் மாலத்தீவும், வங்கதேசமும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. கடலோரப் பகுதிகளில் உப்புநீர் உட்புகுவதால் நிலத்தடி நீர் உவர்ப்புத் தன்மையாக மாறும்.

விளைவுகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்

** பெட்ரோலிய எரிபொருட்கள் உபயோகிப்பதன் அளவைக் குறைக்க வேண்டும்.

** இயற்கைச் சக்தியைத் திறம்பட உபயோகித்துக் கரியமில வாயு வெளியாகும் அளவைக் குறைக்கலாம்.

** காடுகள் அழிவதை முழுவதுமாகத் தடுக்க வேண்டும்.

** இயற்கை உரங்களைப் பயன்படுத்தவும், மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைக்கவும், நிலக்கரி எரித்தலைத் தடை செய்யவும் குறைந்த அளவு முன்னேற்றமடைந்த நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

** வளர்ச்சியடைந்த நாடுகள் சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்காத இரசாயனப் பொருட்களைப் பற்றிய தொழில்நுட்பங்களைப் பிற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

click me!