பின்வரும் பயிர்களில் மகசூலை அதிகரிக்க என்ன செய்யலாம்?

 
Published : Apr 25, 2017, 12:10 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
பின்வரும் பயிர்களில் மகசூலை அதிகரிக்க என்ன செய்யலாம்?

சுருக்கம்

What can be done to increase the yield in the following crops?

1.. தக்காளி

தக்காளியில் மகசூலை அதிகரிக்க, நடவு செய்த 15ம் நாள் ஒரு முறையும் பூக்கும் சமயம் ஒரு முறையும் டிரைக்காண்டினால் 1 மி.லிட்டர் / ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

2.. கத்தரி

கத்தரியில் மகசூலை அதிகரிக்க நடவு செய்த 15ம் நாள் ஒரு முறையும் பூக்கும் சமயம் ஒரு முறையும் டிரைக்காண்டினால் ஒரு மி.லிட்டர் / ஒரு லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்

3.. மிளகாய்

மிளகாயில் பூக்கள் உதிர்வதைக் குறைத்து, மகசூலை அதிகரிக்க நாற்று நடவு செய்து 60-வது 90-வது நாள்களில் நாப்தலின் அசிடிக் ஆசிட் 10 பி.பி.எம் (10 மிலி / லிட்டர் நீர்) என்ற அளவில் தெளிக்க வேண்டும்

4. கொடிவகைப் பயிர்கள்

கொடிவகைப் பெண்பூக்கள் அதிகரிக்கவும், மகசூலை அதிகரிக்கவும், 2-வது, 4-வது, 6-வது இலை வரும் தருணங்களில் எத்திரால் 250 பி.பி.எம். (2.5மி.லி / 10 லிட்டர் நீர்) என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

5. புடல்

புடலங்காயில் பெண்பூக்கள் அதிகரிக்கவும், மகசூல அதிகரிக்கவும் விதைத்து 10வது நாள் ஒரு முறையும், 10 நாட்கள் கழித்து மறு முறையும் எத்திரால் 1 மிலி / 10 லிட்டர் தெளிக்க வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?