இந்த மூன்று பயிர்களிலும் அதிக மகசூல் பெற செய்யவேண்டியது இதுதான்…

 
Published : Nov 09, 2017, 12:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
இந்த மூன்று பயிர்களிலும் அதிக மகசூல் பெற செய்யவேண்டியது இதுதான்…

சுருக்கம்

This is what you need to do to get a high yield on these three crops ...

முந்திரி:

ஒட்டுக்கன்றுகளை நட்ட பின் வேர்செடிகளில் துளிர்த்து வரும் மொட்டுகளை அவ்வப்போது கிள்ளி எடுத்துவிடவேண்டும். முதல் 3 ஆண்டுகளுக்கு கன்றுகளில் 2 மீட்டர் உயரம் வரை தோன்றும் பக்க கிளைகளை வெட்டி செடி நேராக உயரமாக வளர வகை செய்ய வேண்டும். வெட்டி எடுத்த பகுதிகளில் பூஞ்சாணமருந்து பூசிவிட வேண்டும். கன்று நட்ட முதல் 2 ஆண்டுக்கு பூங்கொத்துக்களை அப்புறப்படுத்த வேண்டும். மூன்றாம் ஆண்டிலிருந்துதான் காய்பிடிக்க விடவேண்டும்.

மாதுளை:

காய்ந்த, நோய் தாக்கிய குறுக்கு நெடுக்குமாக வளர்ந்துள்ள கிளைகள் மற்றும் போத்துக்களை நீக்கிவிடவேண்டும். புதிய கிளைகளில் பழங்கள் தோன்றும். எனவே புதிய கிளைகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த பழங்களை அறுவடை செய்த பிறகு டிசம்பரில் பழைய கிளைகளை மூன்றில் ஒரு பகுதி நீக்கிவிடவேண்டும். பூக்கள் அதிகமாக இருந்தால் போதிய எண்ணிக்கை விட்டு, மீதமுள்ளவற்றை நீக்கிவிட்டால் பெரிய பழங்களைப் பெறலாம். திரவ பாரபின் ஒரு சதம் மருந்தை ஜூன் மாதத்தில் 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிப்பதன் மூலம் பழங்களில் வெடிப்பு உண்டாவதைத் தடுக்கலாம்

எலுமிச்சை:

பூக்கள் பூக்கும் தருணத்தில் காய் பிடிப்பதை அதிகரிக்க 2, 4 டி-20 மில்லிகிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும். ஜிங்க் சல்பேட் கரைசல் 5 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து ஆண்டுக்கு மூன்று முறை மார்ச், ஜூலை, அக்டோபர் மாதங்களில் தெளிக்க வேண்டும். காய்ந்த கிளைகளை அகற்றி கார்பன்டசிம் 1 கிராம் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு 3 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.

PREV
click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!