கொய்யா மற்றும் நெல்லியில் அதிக மகசூலுக்கு மேற்கொள்ள வேண்டிய சாகுபடி தொழில்நுட்பங்கள்…

Asianet News Tamil  
Published : Nov 09, 2017, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
கொய்யா மற்றும் நெல்லியில் அதிக மகசூலுக்கு மேற்கொள்ள வேண்டிய சாகுபடி தொழில்நுட்பங்கள்…

சுருக்கம்

Cultivation techniques for high yields in Guava and Nelli ...

கொய்யா:

கொய்யாவில் புதிய வாதுகளில் இலைகளின் பிரிவில்தான் பூக்கள் தோன்றி காய்கள் பிடிக்கும். செப்டம்பர், அக்டோபர் மற்றும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முந்தைய ஆண்டு வாதுகளில் 10-15 செ.மீ. செடியின் நுனிக்கிளைகளை வெட்டிவிடவேண்டும். இதனால் புதிய தளிர்கள் தோன்றி காய்கள் அதிகம் பிடிக்கும். வெட்டிய காயமுள்ள பகுதியின் மூலம் பூஞ்சாள நோய்கள் பரவி விடாமல் தடுக்க 1 சதவீத போர்டோ கலவை அல்லது பைட்டோலான் 3 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பூக்கள் அதிகம் பிடிக்க 1 கிராம் யூரியா 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். மேல் வளரும் குச்சிகளை வளைத்து கற்களை கட்டித் தொங்கவிடுவதன் மூலம் காய்ப்புத் திறனை அதிகரிக்கலாம். கொய்யாவில் விதைகள் அதிகம் தோன்றுவதை தடுக்க ஜிப்ரலிக் அமிலம் 1 கிராம் 10 லிட்டர் நீரில் கரைத்து மொட்டுகள் தோன்ற ஆரம்பித்த உடன் கைத்தெளிப்பானால் ஒருமுறை தெளித்தால் விதைகள் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

நெல்லி:

நெல்லி கன்றுகளில் தரையிலிருந்து 3 அடி உயரத்துக்கு பக்க கிளைகள் உருவாகாமல் அவ்வப்போது வெட்டிவிட வேண்டும். பின்பு பக்க கிளைகள் எதிரெதிர் திசைகளில் அனுமதித்தல் வேண்டும். ஒட்டுக்கு கீழே வளரும் கிளைகளை தொடர்ந்து நீக்கிவிடவேண்டும். நோய்வாய்ப்பட்ட உடைந்த மற்றும் குறுக்கே செல்லும் கிளைகளை நீக்கிவிட வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!