உளுந்து பயிரை வெகுவாக தாக்கும் பூச்சியை இப்படிதான் கட்டுப்படுத்தணும்...

First Published Jul 2, 2018, 1:02 PM IST
Highlights
This is the way to control the pest attack


** பூ மற்றும் காய் பருவத்தில் உள்ள உளுந்து மற்றும் பச்சை பயிரில் பச்சை காய் புழு தாக்குதல் காணப்படுகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

** இவற்றை தவிர்ப்பதற்கு ஆரம்ப நிலையில் இலைகள் உதிரும் காயின் உள்ளே புழுக்கள் தலையை உள்ளே விட்டு உடலை வெளிப்பக்கம் வைத்திருக்கும். காய்களில் வட்ட வடிவ துளைகள் இருக்கும். 

** பூச்சியின் முட்டைகள் வட்ட வடிவில் பால்வெள்ளை நிறத்தில் தனித்தனியாக காணப்படும். புழுக்கள் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறம் வரை மாறி மாறி தோன்றும். பழுப்பு நிற வரிகள் உடலின் பக்கவாட்டில் இருக்கும்.

** கூட்டுப்புழு நிறத்தில் மண் இலை, காய் பயிர், குப்பைகள் காணப்படும். தாய்ப்பூச்சி மங்கிய பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் தடித்து காணப்படும்.

** இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படும். இவற்றை கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில் இனக்கவர்ச்சி பொறி வைக்கலாம்.

** 50 பறவை தாங்கிகள் வைக்கலாம். வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கலாம்.

click me!