நெற்பயிரில் அதிக மகசூல் பெற இந்த வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்தலாம்...

 
Published : May 30, 2018, 01:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
நெற்பயிரில் அதிக மகசூல் பெற இந்த வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்தலாம்...

சுருக்கம்

These growth motivators can use high yields in rice.

நெற்பயிரில் அதிக மகசூல் பெற வளர்ச்சி ஊக்கிகள்

ஏக்கருக்கான அளவு அமுதக் கரைசல் 50 – 80 லிட்டர் ஆவூட்டம் 5 – 10 லிட்டர் தேமோர்க் கரைசல் 5 – 10 லிட்டர் அரப்புமோர் கரைசல் 5 – 10 லிட்டர் மீன் அமினோ அமிலம் 3 லிட்டர் நெல் நடவு செய்த 20 முதல் 25ஆம் நாளில் இருந்து 7 முதல் 10 நாள் இடைவெளியில் 2 முதல் 4 முறை இக்கரைசல்களைப் பயன்படுத்தலாம்.

ஒட்டுண்ணிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 

மூலிகைப் பூச்சி விரட்டிகள் பயன்படுத்துதோடு மட்டுமல்லாமல் ஒட்டுண்ணிகளையும் பயன்படுத்த வேண்டும். இலைச்சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த ‘ஜப்பானிகம்’ என்ற ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2சிசி என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். 

‘பிரக்கானிட்’ என்ற குளவியை ஏக்கருக்கு 5 பாக்கெட் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதல் மிக அதிகமாக இருப்பின் மூலிகைப் பூச்சிவிரட்டியுடன் ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கிலோ பவேரியா ப்ராங்கியார்ட்டி அல்லது பவேரியா பாஸ்ஸியானா கலந்து தெளிக்கலாம். 

எப்பொழுதும் ஒரு வளர்ச்சி ஊக்கி-ஒரு பூச்சிவிரட்டிச் கரைசல்-சூடோமோனஸ் என்று மாற்றி மாற்றி நெல்லுக்கு உணவைக் கொடுத்துவர வேண்டும்

PREV
click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!