செம்மறியாடு (அ) வெள்ளாடுகளை  இந்த முறையில் வளர்ப்பது மிகவும் எளிது...

Asianet News Tamil  
Published : Feb 13, 2018, 01:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
செம்மறியாடு (அ) வெள்ளாடுகளை  இந்த முறையில் வளர்ப்பது மிகவும் எளிது...

சுருக்கம்

Sheep or a goat is very easy to grow ...

செம்மறியாடு (அ) வெள்ளாடுகள் வளர்ப்பு முறைகள்

1.மேய்ச்சல் முறை

** செம்மறியாடு / வெள்ளாடுகளை திறந்தவெளி மேய்ச்சல் நிலங்களில் மேயவிட்டு வளர்க்கும் முறையே மேய்ச்சல் முறையாகும்.

** இம்முறையில் தீவனச் செலவு குறைவு

** இம்முறையில் எல்லா வகைப்புற்களையும் நல்ல முறையில் உபயோகிப்பது அரிது ஆகும். எனவே நாம் சுழற்சி முறை மேய்ச்சலைப் பின்பற்றலாம். .

2..  மண்தரையில் வளர்த்தல்

** இம்முறையில், ஒவ்வொரு வருடமும் 1-2"" மண்தரையின் மேல் தளத்தை எடுத்துவிடவேண்டும்.

** மாதம் ஒருமுறை சுண்ணாம்புத்தூள் தெளிப்பதன் மூலம் ஆடுகளின் கொட்டகையில் நோய்த்தாக்கத்தினை குறைத்திடலாம்.

** கொட்டகையை நல்ல மேட்டுப்பாங்கான, தண்ணீர் தேங்காத இடங்களில் அமைத்திடல் வேண்டும்.

3.. ஆழ்கூள முறை வளர்ப்பு

** இம்முறையில், ஆழ்கூளப்பொருட்களான வேர்க்கடலைத் தோல், கரும்புத்தோகை முதலியவற்றை கொட்டகையின் தரையில் மேல் 1/2 அடி ஆழத்திற்கு இட்டு, அதன்மேல் ஆடுகளை விட்டு வளர்க்கலாம்.

** ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் ஆழ்கூளப்பொருட்களுடன் கலந்து நல்ல உரமாகப் பயன்படும்

** ஆழ்கூளப்பொருட்களை 6 மாதத்திற்கொருமுறை அள்ளி எடுத்துவிடவேண்டும்.

** பலத்த மழைக்காலத்தில், ஆழ்கூளப்பொருட்கள் அதிக ஈரத்தன்மையுடன் இருப்பின் அமோனியா வாயு உற்பத்தி ஆகும். ஆகவே அதிகம் ஈரம்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

4.. பரண்மேல் கொட்டகை

** அதிக முதலீடு தேவை

** இம்முறையில் தரையிலிருந்து 3 மீ உயரத்தில் மரப்பலகையிலான தரைகொண்ட கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்க்கலாம்.

** இம்முறையில் குறைந்த வேலையாட்களும், பசுந்தீவனம் உற்பத்தி செய்ய அதிக நீர்பாசன நிலமும் தேவைப்படும்.

** உயர்த்தப்பட்ட கொட்டகை சுத்தமாக இருக்கும். மேலும் ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் தரையில் விழுந்துவிடும். இதனை ஆறு மாதத்திற்கொரு முறை எடுத்துவிட்டு சுத்தமாக வைத்துக் கொள்ளவேணடும் 

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!