மிளகாய் சாகுபடியின்போது மேற்கொள்ள வேண்டிய பூச்சி மேலாண்மை நடவடிக்கைகள்…

 
Published : Nov 09, 2017, 01:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
மிளகாய் சாகுபடியின்போது மேற்கொள்ள வேண்டிய பூச்சி மேலாண்மை நடவடிக்கைகள்…

சுருக்கம்

Pest Management activities to be taken during chilli cultivation ...

பூச்சிகளின் வகைகள்

இலைப்பேன்:

இவை இலையைச் சுருட்டி சாற்றை உறிஞ்சி விடும். இவற்றை கட்டுப்படுத்த

ஏக்கருக்கு மீத்தைல் டெமட்டான் 200 மி.லி. தெளிக்கலாம்.

அசுவினி:

இவை கூட்டமாக இலையின் மேல் குருத்துக்களில் பூ மொட்டுகளில் மற்றும் காய்களில் காணப்படும். அசுவினியைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு அசிப்பேட் 200 கிராம் அல்லது மாலத்தியான் 200 மி.லி. தெளிக்கலாம்.

காய்ப் புழு:

புரடீனியா மற்றும் பச்சைக் காய்ப் புழுக்கள் இலைகளையும், காய்களையும் தின்று பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்திட ஆமணக்குச் செடியை வரப்பு ஓரத்தில் பொறிப் பயிராக விளைவித்து புரடீனியா பூச்சியின் முட்டைக் குவியல்களைக் கவர்ந்து அழிக்கலாம்.

வேப்ப எண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 5 சதத்தை சோப்பு போன்ற ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கவும். பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலையைத் தாண்டும் பட்சத்தில் கீழே குறிப்பிடும் ரசாயனப் பூச்சி மருந்துக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கவும்.

PREV
click me!

Recommended Stories

Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!
Business: இப்படியொரு வாய்ப்பா...? இனி விவசாயமும் ஸ்டார்ட்அப் தான்! ரூ.25 லட்சம் வரை அரசு சப்போர்ட்!