சோளம் சாகுபடி நுட்பங்கள்…

 
Published : Nov 02, 2016, 03:29 AM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
 சோளம் சாகுபடி நுட்பங்கள்…

சுருக்கம்

சோளம் தீவனம், தீவனப்பயிர் மற்றும் தானியப் பயிராகப் பயன்படுத்தப் படுகிறது. தமிழகத்தில் நாமக்கல், திண்டுக்கல், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், விருதுநகர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பெரும்பாலும் பயிரிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் சோளம் ஆடிப்பட்டம் (ஜூலை – செப்டம்பர்), புரட்டாசி பட்டம் (அக்டோபர் – டிசம்பர்) மற்றும் கோடை காலங்களில் பயிரிடப்படுகிறது. கோ.30 என்ற ரகம் தீவனத்துக்கும், உணவுக்கும் ஏற்றது. இந்த ரகம் அதிக மகசூல் கொடுப்பதால் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சோள சாகுபடியில் முக்கியமாக இரண்டு கட்டங்கள் உள்ளன. அதாவது பூ பூக்கும் போதும், கதிரில் பால் பிடிக்கும் போதும் மழை வந்து விடக்கூடாது. இதைக்கவனித்து சாகுபடி செய்வது நல்லது. விதைப்பு செய்த 30ம் நாள், பூ வைக்கும் 90ம் நாள் கதிர்களில் பால் பிடிக்கும்.

இந்த நாட்களில் மழை பெய்து விட்டால் கதிரில் பூஞ்சாணம் பிடித்து விடும். விளைச்சலும் நன்றாக இருக்காது. கோவில்பட்டியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் கே.12 என்ற ரகத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த ரகம் மானாவாரி சாகுபடிக்கும் கரிசல் மண் வகைக்கும் ஏற்றது. தானியச் சோளத்தின் தற்போதைய பண்ணை விலை ரூ.21 முதல் 23 வரை சந்தையில் விற்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?