இந்த முறையில் கோழிகளுக்கு கொட்டகை அமைத்தால் நன்மைகள் அதிகம்…

 
Published : Nov 01, 2017, 12:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
இந்த முறையில் கோழிகளுக்கு கொட்டகை அமைத்தால் நன்மைகள் அதிகம்…

சுருக்கம்

In this poultry method we have many plus

 

தீவிர வளர்ப்பு முறை

இந்த முறையில் கோழிகள் கொட்டகைகளில் முழுவதும் அடைத்து வளர்க்கப்படுகின்றன. கொட்டகைகளில் தரையிலோ அல்லது கம்பி வலைகளின் மீதோ அல்லது கூண்டுகளிலோ கோழிகளை வளர்க்கலாம்.

இம்முறை ஒரு சிறந்த, வசதியான, செலவு குறைந்த, அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்கும் நவீன முறையாகும்.

இந்த முறையால் கிடைக்கும் நன்மைகள்

** பண்ணை அமைக்க குறைந்த இடமே தேவைப்படும்

** சந்தைக்கு அருகிலேயே பண்ணைகளை அமைக்கலாம்.

** தினந்தோறும் பண்ணையை மேலாண்மை செய்வது எளிது.

** கோழிகளின் நடமாட்டம் தீவிர முறை வளர்ப்பில் குறைவாக இருப்பதால் கோழிகளின் உற்பத்தித் திறனும் அதிகரித்து, அதிக அளவு சக்தியும் சேமிக்கப்படுகிறது.

** அறிவியல் முறையில் கோழிகளை வளர்க்கலாம். அதாவது இனப்பெருக்கம், தீவனமளித்தல், மருந்துகளை அளித்தல், கோழிகளைப் பண்ணையிலிருந்து நீக்குதல் போன்ற மேலாண்மை முறைகளை சுலபமாகவும், துல்லியமாகவும் செய்யலாம்.

** நோயுற்ற கோழிகளை எளிதில் கண்டறிந்து தனியாகப் பிரித்து சிகிச்சை அளிக்கலாம்.

இந்த முறையால் ஏற்படும் தீமைகள்

** கோழிகளின் இயற்கையான குணநலன்களான இறக்கைகளை விரித்தல், தரையை கால்களால் பிரண்டுதல் போன்றவை பாதிக்கப்படுகிறது.

** வெளிப்புற சூரிய ஒளி, தீவன ஆதாரங்கள் போன்றவை கோழிகளுக்குக் கிடைக்காததால் அவற்றுக்கு சரிவிகித தீவனத்தை அளிப்பதால் மட்டுமே அவற்றுக்கு சத்துப் பற்றாக்குறை நோய்களைத் தடுக்கலாம்.

** நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?