நிலக்கடலை சாகுபடியில் களை நிர்வாகத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணும்...

Asianet News Tamil  
Published : Dec 15, 2017, 12:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
நிலக்கடலை சாகுபடியில் களை நிர்வாகத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணும்...

சுருக்கம்

Ground management will give importance to weed management ...

நிலக்கடலை சாகுபடி

களை நிர்வாகம்

நிலக்கடலையில் அதிக மகசூல் பெற களை கட்டுப்பாடு மிகவும் அவசியம். நிலத்தில் உள்ள பயிர்சத்து வீணாகாமல் தவிர்த்திடவும், களைகள் மூலம் மண், ஈரம் வீரயமாவதைத் தவிர்த்திடவும், பயிர்களுக்கு போதிய சூரிய ஒளி கிடைத்திட மற்றும் பூச்சி நோய்கள் பரவாமல் தடுத்து அதிக விளைச்சல் பெறுவதற்கு களை கட்டுப்பாடு மிகவும் அவசியமாகிறது. விதைத்த 45 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். ஏனெனில், களை நிர்வாகம் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்.

விதைப்புக்குப் பின் களைக் கொல்லி பயன்படுத்துதல்

ஒரு ஏக்கருக்கு புளுகுளோரலின் களைக் கொல்லியை 800 மில்லி என்ற அளவில் விதைத்த 3 நாட்களுக்குள் நிலத்தில் அடித்து களைகளைக் கட்டுப்படுத்தலாம். மணலுடன் கலந்தும் தூவலாம். கைத் தெளிப்பான் கொண்டும் தெளிக்கலாம். கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கும்போது அகல வாய் தெளிப்பு முனை பயன்படுத்தி தெளிக்க வேண்டும். 

பயன்கள்

• களைக்கொல்லி அடிப்பதன் மூலம் முதல் களை எடுக்க வேண்டியதில்லை.

• களை எடுப்பதற்கு குறைந்த ஆட்களைப் பயன்படுத்தினால் போதுமானது.

• பயிருக்கு இடப்பட்ட இயற்கை/செயற்கை உரங்களின் சேதாரம் தவிர்க்கப்பட்டு விதை உற்பத்தி செலவு குறையும்.

• பயிர்களின் வளர்ச்சி வேகம் கூடி மகசூல் அதிகரிக்கவும்.

• மேலும் களைக்கொல்லி பயன்படுத்துவதன் மூலம் வேலை ஆட்கள் பற்றாக்குறையைச் சமாளித்து விடலாம்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!