ஆடிப்பட்டத்துக்கு சிறந்த இரகம் எது?...

 
Published : Oct 08, 2016, 05:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
ஆடிப்பட்டத்துக்கு சிறந்த இரகம் எது?...

சுருக்கம்

தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 7 மாதங்கள் மழைப்பொழிவுள்ள மாதங்கள். தென்மேற்குப் பருவமழை காலத்தில் வரும் ஆடிப்பட்டத்தில் குறுகிய கால இரகங்கள் அல்லது பயிர்களைத் தேர்வுசெய்து நடவு செய்வது நல்லது.
>
> தற்போது ஆண்டு முழுவதுமே அனைத்து வகையான பயிர்களும் விதைக்கப்பட்டாலும் அந்தந்தப் பருவத்துக்கான தனித்தன்மை உண்டு.
>
> ஆடிப்பட்டத்தின்போது, சுமாரான மழையே கிடைப்பதால், குறுகியகால இரகங்கள் தேர்வு செய்வதே சிறந்தது.
>
> நெல்லில் 100-110 நாள்கள் வயதுடைய இரகங்களைத் தேர்வு செய்யலாம்.
>
> சோளம், நிலக்கடலை, துவரை, கேழ்வரகு, சாமை, தினை ஆகியன 90 முதல் 110 நாட்களில் அறுவடைக்கு வரும் பயிர்கள். அதனால் இவற்றைத் தேர்வு செய்யலாம்.
>
> வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கிடைக்கும். இந்தப் பருவத்தில் நீண்டகால இரகங்கள் (6 மாதங்கள்) தேர்வு செய்யலாம்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?