வறட்சியைத் தாங்கி வளரும் அகர் மரத்தின் நன்மைகள்…

 
Published : Feb 27, 2017, 01:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
வறட்சியைத் தாங்கி வளரும் அகர் மரத்தின் நன்மைகள்…

சுருக்கம்

The benefits of agar tree

அகர் மரம் (Agar tree, Agar wood) என்பது நமது நாட்டில் பல ஆண்டு காலமாக  சித்த ஆயுர்வேத மருந்துகள்  மற்றும் வாசனை பொருட்கள் தயாரிக்க  உபயோகிக்க பட்டு வந்த மரம் தான். ஆனால்  தற்போது  இந்த மரம் அழிந்து வரும் மர வகைகளில் வரிசையில் உள்ளது..

இந்த மரத்தில் இருந்து தான் உலகிலேயே மிக அதிக மதிப்புடைய அகர் ஆயில் எடுக்க படுகிறது, ஒரு கிலோ  ஆயில் இன் விலை அதிக பட்சம ஒரு லட்சம் வரைக்கும் விற்க படுகிறது. ஒரு கிலோ மர கட்டையின் விலை 30000 இல் இருந்து 60000 ஆயிரம் வரைக்கும் விற்கப்படுகிறது.

இதன் நன்மைகள்

1. மிகவும் வேகமாக வளர கூடியது.

2. சந்தன மரம் போல அல்லாமல் ஏழாவது வருடத்தில் இருந்தே அறுவடை செய்யலாம்.

3. ஓரளவு வறட்சியை தாங்க கூடியது. (ஆனால் மிக வறண்ட நிலங்களுக்கு அகர் உகந்தது அல்ல)

4. உலக அளவில் அகர் மரங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

ஏழு வருடம் நன்கு வளந்த ஒரு மரத்தில் முலம் 2 லட்சம் ருபாய் வரைக்கும் மிக எளிதாக பெறலாம்.

மூன்று மிட்டர் இடைவெளியில் ஏக்கருக்கு  சுமார் 300  மர கன்றுகள்  நடலாம்.

பொதுவாக அகர் இந்தியாவில் அஸ்ஸாமில் அதிகமாக வளர்க்கபடுகிறது, தற்போது கர்நாடகாவில் அதிக விவாசாயிகள் அகர் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டில் சில தனியார் வேளாண்மை பண்ணைகள், அகர் நாற்றுகள் மற்றும் தேவையான உரங்களை வழங்கி அவர்களே நல்ல விலைக்கு  மரங்களை வெட்டி கொள்கிறார்கள்…

 

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?