தென்னைமரத்தில் வறட்சியைத் தாங்க சில வழிகள்…

 
Published : Dec 10, 2016, 01:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
தென்னைமரத்தில் வறட்சியைத் தாங்க சில வழிகள்…

சுருக்கம்

தென்னையில் வறட்சியை தாங்க சோற்றுக் கற்றாழை நடவு செய்த  விவசாயின் அனுபவம்
முத்துவேல் என்ற விவசாயி தென்னை மரம் நடவு செய்த ஒரு வருடத்தில் ஒவ்வொரு  தென்னை மரத்திற்கும் அருகில்;  ஒரு   சோற்றுக் கற்றாழை கன்றை நடவு செய்து உள்ளார். அவை ஒரு வருடத்திற்குள் மரத்தை சுற்றி பக்கக் கன்றுகள் தோன்றி மடல்கள் பெரிய சைசாக வளர்ந்திருந்தது.

அவற்றை வெட்டி தென்னை மரத்தின் மறுபக்கம் கீழே புதைத்து வைத்தள்ளார்  அவை  தண்ணீர் விட மக்கியது போக வேரிலிருந்து தழைந்து  வர ஆரம்பித்தது. இவை மரத்திற்கு ஒரு எருவாகவும் என்று நினைத்தார்.

ஆனால் என்னுடைய நிலத்திற்கும் பக்கத்து தோட்டத்தில் உள்ள தென்னந் தோப்பு விவசாயி உன்னுடைய தென்னை மரம் மட்டும்  வாடாமல் இருக்கிறது. அதுவும்  ஒரு பொழிக்குள்ள என்னுடைய தென்னை மரம்  வாடி காய ஆரம்பித்தது  ஏன் என்று தெரியவில்லையே என்றார். நான் அப்ப ( மூன்று வருடத்திற்கு முன்பு) தண்ணீர் இருந்ததால் சொட்டுநீர் போட்டு தண்ணீர் தினமும் பாய்ச்சி வந்தேன் தண்ணீர் பாய்ச்சியதால்; தான்  என்னுடைய மரம் நன்றாக இருக்கிறது என்று நினைத்து விட்டேன்.

இப்பொழுது பார்த்தால் அவர் மரம் காய்ந்து பட ஆரம்பித்து  உள்ளது. என்னுடைய மரம் பாளை போட்டு  காய்ப்புக்கு வந்து விட்டது.   இப்ப  தண்ணீர் கூட  பாய்ச்சுவது இல்லையே.   வறட்சியின் காரணமாக  நம்ப மரமும் காய்ந்து விடுமோ என்று வருத்தப்பட்டு கொண்டு தென்னை மரத்தின் அடியில் வெரும் புல்லாக இருந்த இடத்தில் தோண்டி பார்த்தேன். மண் பொது பொதுப்பாக இருந்தது நான் சோற்று கற்றாழையை வெட்டி புதைத்து வைத்த இடம் அது.

தென்னை மரம் மரத்து  சோற்று கற்றாழை வைப்பது  இது  ஒரு வகைக்கு பரவாயில்லை  நம்ம மரத்துல வண்டு தாக்குதலும் இல்லை. வறட்சியையும்  தாங்கி கொண்டு வருகிறது. வேர் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. காய்ப்புக்கு வருகிற காய் சொறிக் காயாகவும் இல்லை என்று நினைத்து ஒவ்வொரு வருடமும் நான் சோற்றுக் கற்றாழை வளர வளர மடல்களை அறுத்து புதைத்து வைத்து வருகிறேன்.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு மற்ற தென்னந் தோப்பு வைத்துள்ள விவசாயிகளும் மரம் மரத்திற்கு ஒரு சோற்றுக் கற்றாழை வைத்து  வறட்சியிலிருந்தும், வண்டு தாக்குதலில் இருந்தும் தென்னை மரங்களை பாதுகாக்கலாம் என்றார்.

PREV
click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!