Asianet News TamilAsianet News Tamil

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 5 பேர் பலி, 1,000 வீடுகள் சேதம்..

வடக்கு பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட  6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர், 1,000 வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

5 Killed, 1,000 Homes Destroyed In Magnitude 6.9 Earthquake In Papua New Guinea Rya
Author
First Published Mar 25, 2024, 3:17 PM IST

வடக்கு பப்புவா நியூ கினியாவில் நேற்று அதிகாலை 6.9 என்ற ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் செபிக் ஆற்றின் கரையில் அமைந்துள்ள டஜன் கணக்கான கிராமங்கள் ஏற்கனவே பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. .இதில் 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மாகாண காவல்துறைத் தளபதி கிறிஸ்டோபர் தாமரி பேசிய போது “ தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இறப்பு எண்ணிக்கை "அதிகமாக இருக்கலாம்" என்று கூறினார். மேலும் 1000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், சேத விவரங்களை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. முழங்கால் உயர வெள்ளத்தில் மர வீடுகள் சேதமடைந்து இடிந்து விழுவதை பார்க்க முடிகிறது. 

தீவு தேசமான பப்புவா கினியாவில் 9 மில்லியன் பேர் வாழ்கின்றனர். எனினும் இவர்களின் பலர் முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு வெளியே வாழ்கின்றனர், அங்கு கடினமான நிலப்பரப்பு மற்றும் முறையான சாலைகள் இல்லாததால் தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளை தீவிரமாக பாதிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது என்பது பொதுவான நிகழ்வு தான். இது நில அதிர்வு "ரிங் ஆஃப் ஃபயர்" என்று அழைக்கப்படும் . தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் தீவிர டெக்டோனிக் செயல்பாட்டின் வளைவு பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இங்கு பேரழிவை ஏற்படுத்தும் நிலச்சரிவுகளும் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios