Asianet News TamilAsianet News Tamil

எங்கள் பகுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை; அமைச்சரை முற்றுகையிட்ட கிராம மக்களால் பெரம்பலூரில் பரபரப்பு

பெரம்பலூரில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் சிவசங்கர், அரசு அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

village people demand basic needs to minister ss sivasankar in perambalur district vel
Author
First Published Nov 30, 2023, 11:43 AM IST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பூர், கல்லை, காரப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குறிப்பிட்ட கிராமங்களுக்கு ஊராட்சி நிர்வாக மயான பகுதியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

மேலும் கழிவுநீர் வசதி, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட எவ்விதமான அடிப்படை வசதிகளையும் ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பெரிய வெண்மணி கிராமத்தில் தொழிற்பயிற்சி கல்லூரிக்கு கட்டிடம் கட்ட பூமி பூஜை, வேப்பூர் கிராமத்தில் மகளிர் விடுதி, நியாய விலை கடைகள் திறப்பு என 10 கோடியே 87 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும்,  தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் வேப்பூர் பகுதிக்கு வந்திருந்தனர்.

சிறையில் அமர்ந்து மது அருந்திய தலைமை காவலர்; வீடியோ வைரலான நிலையில் சிறைத்துறை அதிரடி நடவடிக்கை

இதனை அறிந்த ஓலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் வேப்பூர் கிராமத்தின் ஆறாவது வார்டு உறுப்பினர் பழனிமுத்து தலைமையில், அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என வேதனை தெரிவித்து சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios