Asianet News TamilAsianet News Tamil

3 சவரன் நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூர கொலை; தொடர் குற்ற சம்பவத்தால் வீட்டில் இருக்கவே பெண்கள் அச்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

A woman who was alone at home in Coimbatore was murdered and her jewelry stolen vel
Author
First Published May 6, 2024, 10:17 AM IST

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பாலாஜி நகரில் குடியிருந்து வருபவர் மனோகரன். இவரது மனைவி ரேணுகா (வயது 40). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். ரேணுகா அருகே உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கணவர் மனோகரன் மகா சிந்தானிட்ஸ் என்ற பெயரில் ஸ்வெட்டர் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு மனோகரன் மற்றும் அவரது இரண்டு பெண் குழந்தைகளும் கோவை காந்திபுரத்துக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த ரேணுகாவை அடையாளம் தெரியாத நபர் பகல் 2 மணி முதல் 3 மணிக்குள் வீட்டுக்குள் வந்து அரிவாளால் தலை மற்றும் முகத்தில் வெட்டி கொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார். 

TN 12th Result 2024: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?

அவரது கணவர் மற்றும் மகள்கள் திரும்பி வந்து பார்த்தபோது படுக்கையில் ரத்த வெள்ளத்தில் ரேணுகா இறந்து கிடந்துள்ளார். இதை அடுத்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், பெரியநாயக்கன்பாளையம் ஆய்வாளர்  ஆகியோர் ரேணுகாவின் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.  

விளையாடிக்கொண்டிருந்த 5வயது சிறுமியை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்..ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை

ரேணுகா உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு பதிந்திருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை வைத்தும், அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்தும் குற்றவாளியை தேடி வருகின்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த அவரது உறவினர்கள் ரேணுகாவின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். பட்டப் பகலில் வீடு புகுந்து பெண்ணை வெட்டி நகை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios