இந்தியாவின் அடுத்த இலக்கு தென் ஆப்பிரிக்கா; ஜனவரியில் ஆட்டம் ஆரம்பம்…
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒரு நாள் ஆட்டங்கள், மூன்று டி20 ஆட்டங்களில் மோதுகிறது.
முன்னதாக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 5-ஆம் தேதி தொடங்குகிறது.
பிசிசிஐ செயலர் அமிதாப் செளத்ரி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்,. அதில், 'மகாத்மா காந்தி - நெல்சன் மண்டேலா' பெயரில் நடைபெறும் இந்தத் தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகள் இடம் பெறுகின்றன.
அதனைத் தொடர்ந்து ஆறு ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரும், மூன்று ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரும் நடைபெறவுள்ளன.
போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்தத் தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவில் 10 நாள்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளது இந்தியா. அப்போது ஒரு பயிற்சி ஆட்டமும் நடைபெறவுள்ளது.