Super Singer Ajay Krishna: மகன் பிறந்த ஒரே வருடத்தில் புது வீட்டில் குடியேறிய அஜய் கிருஷ்ணா! குவியும் வாழ்த்து
சமீபத்தில் தான் தன்னுடைய மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சூப்பர் சிங்கர்... அஜய் கிருஷ்ணா தற்போது புதிய வீடு கட்டி குடியேறியுள்ளார். இதற்க்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வாய்ப்பு கிடைக்காத பல பாத்ரூம் சிங்கர்ஸ் மற்றும் திறமையாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து அவர்களின் திறமைகளை உலகறிய வைத்த ரியாலிட்டி ஷோ.. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.
15 வயது உட்பட்ட குழந்தைகளுக்கு சூப்பர் சிங்கர் ஜூனியர் என்கிற நிகழ்ச்சியும்... 16 வயதை கடந்தவர்களுக்கு சூப்பர் சிங்கர் சீனியர் என மாறி மாறி நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தங்களின் குரல் வளத்தை வெளிப்படுத்தி பலர் வெள்ளித்திரையில் இன்று பின்னணி பாடகர்களாக உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு என உலக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. இவர் உதித் நாராயணன் போலவே பாடுவார் என்பது இவரின் தனி சிறப்பாகும். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் இல்லை என்றாலும்... இவரது குரலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் பாடுவது மட்டும் இன்றி, வெளிநாடுகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் விஜய் டிவி ஷோக்களில் கலந்துகொண்டு பாடல்கள் படுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் சமூக வலைத்தளத்திலும், இவருக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
அஜய் கிருஷ்ணா, கடந்த 2022-ம் ஆண்டு தன்னுடைய ரசிகையான ஜெசி என்பவரையே காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அயான் என பெயர்வைத்துள்ளனர். குழந்தையின் முதல் பிறந்தநாளை கடந்த மாதம் தான், மிகவும் பிரமாண்டமாக இந்த ஜோடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதை தொடர்ந்து... அண்மையில் புதிய வீடு ஒன்று கட்டி மனைவி மற்றும் மகனுடன் குடியேறியுள்ளார் அஜய் கிருஷ்ணா. குழந்தை பிறந்த ஒரே வருடத்தில்... புதிய வீட்டில் குடியேறியுள்ள அஜய் கிருஷ்ணா - ஜெஸ்சி தம்பதிக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் சமூக வலைத்தளத்தில் இதுகுறித்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.