Jyothika : ஓட்டு போட வராததுக்கு இதுதான் காரணம்... அரசியல் எண்ட்ரி குறித்தும் முதன்முறையாக மனம் திறந்த ஜோதிகா
நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வாக்களிக்காதது பற்றி முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
jyothika
நடிகர் சூர்யாவின் மனைவி திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகினாலும், கடந்த 2015-ம் ஆண்டு ரிலீஸ் ஆன 36 வயதினிலே படம் மூலம் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார். தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா, தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி என பிற மொழிகளிலும் கலக்கி வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான காதல் தி கோர் மற்றும் இந்தியில் ரிலீஸ் ஆன ஷைத்தான் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.
Suriya wife jyothika
தற்போது நடிகை ஜோதிகா நடிப்பில் இந்தியில் ஸ்ரீகாந்த் என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ள அப்படத்திற்கான புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ள ஜோதிகா, சென்னையில் நடைபெற்ற அப்படத்தின் தமிழ் வெர்ஷனுக்கான பிரஸ் மீட்டில் கலந்துகொண்டார். அப்போது பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ஜோதிகா, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வாக்களிக்காதது பற்றியும் விளக்கம் அளித்தார்
இதையும் படியுங்கள்... கடவுளாக மாறிய விஜயகாந்த்..! மகன் படிப்புக்கு கேப்டன் நினைவிடத்தில் கண்ணீர் விட்ட ஏழை தாய்க்கு பாலா செய்த உதவி!
jyothika at Srikanth Movie Press Meet
அதன்படி அவர் கூறியதாவது : நான் தொடர்ந்து வாக்களித்து வருகிறேன். ஆனால் சில நேரங்களில் வேலைக்காக வெளியில் செல்வதால் வாக்களிக்க முடிவதில்லை, சில நேரங்களில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும். இதெல்லாம் தனிப்பட்ட விஷயம். அதுக்கு மதிப்பளியுங்கள் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து, நிறைய சமூக கருத்துள்ள கதைகள் நிறைய தேர்வு செய்து நடிக்கும் நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை, அதற்கான ஐடியா எதுவும் இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது.
Jyothika reveals why she is not casting her vote
இதற்கு பதிலளித்த ஜோதிகா, என்னை அரசியலுக்கு வரச்சொல்லி யாருமே கேட்கவில்லை என கூறினார். உடனே ஏதேனும் கட்சியில் இருந்து அழைப்பு வந்தால் சேர்வீர்களா என முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, இப்போதைக்கு பிளான் இல்லை என கூறிய ஜோதிகா, தன்னுடைய இரண்டு பசங்களும் படிக்கிறார்கள். அவர்களுக்கு பொதுத்தேர்வு வேற இருக்கிறது. அந்த வேலையே எனக்கு போதுமானதாக உள்ளது. இப்போதைக்கு பிட்னஸில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். ஆனால் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை” என ஓப்பனாக கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... Madonna : "இயந்திரங்களுக்கு நடுவில் பூத்த வண்ண பூ".. டக்கர் போஸில் அசத்தும் மடோனா செபாஸ்டியன் - கூல் பிக்ஸ்!