Kanaka: கனகாவின் காதலன் யார்? தன்னை தானே தனிமை படுத்திக்கொள்ள இது தான் காரணம்.. பிரபலம் போட்டுடைத்த ரகசியம்!
நடிகை கனகா தனிமையில் இருப்பது குறித்து, பல்வேறு தகவல்கள் கூறப்பட்டு வரும் நிலையில்... பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அவர்கள்.. உண்மை என்ன என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகள் தான் நடிகை கனகா. திரை உலகில் ஒரு பாடகியாக அறிமுகமாகி, தன்னுடைய குரல் வளத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர வேண்டும் என நினைத்த கனகாவிற்கு, எதிர்பாராத விதமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி, இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில்... நடிகர் ராமராஜன் ஹீரோவாக நடித்த 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் படு பிஸியான ஹீரோயினாக மாறிய கனகாவுக்கு, தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடும் வாய்ப்புகளும் கிடைத்தது.
80பது மற்றும் 90 காலகட்டங்களில், தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்த கனகா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்திக், பிரபு, மோகன்லால், மம்முட்டி, ஜெயராம், போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
கனகாவின் திரையுலக வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருந்தாலும், இவருடைய பர்சனல் வாழ்க்கை பற்றி பல்வேறு தகவல்கள் வலம் வருகிறது. இவற்றில் சில வதந்திகளும் அடங்கும். கனகாவை திருமணம் செய்து ஒருவர் ஏமாற்றிவிட்டதாக ஒரு தகவல் கூறப்படும் நிலையில், இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் சில பத்திரிக்கையாளர்கள் கூறி வருகிறார்கள்.
சமீபத்தில் நடிகை குட்டி பத்மினி கனகாவை பேட்டி எடுக்க, முயன்ற போது... ஆரம்பத்தில் இவரிடம் நன்றாக பேசிய கனகா, பின்னர் இவர் அழைத்தால் கூட செல்போனை எடுக்கவில்லை என கூறியிருந்தார். எனவே அவர் யாருடனும் பேச விரும்பவில்லை என்பதையே அவரது செயல் காட்டுவதாகவும் அவருடைய வீட்டுக்கு வாசலில் நான் நின்றபோதும் கூட, அவர் தன்னை வீட்டுக்குள் கூட அனுமதிக்கவில்லை என்றும் குட்டி பத்மினி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவ்வபோது வீட்டை விட்டு வெளியே வரும் கனகாவுக்கு உதவியாளர் ஒருவர் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை கனகா இப்படி தனிமையில் வாழ்ந்து வருவது, புரியாத புதிராகவே இருக்கும் நிலையில், கனகா பற்றிய சில தகவல்களை செய்யாறு பாலு தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.
Actress Kanaka
இவர் கூறியுள்ள தகவலில், 'கனகாவின் அம்மா தேவிகாவால் நடிகர் ஒருவர் சினிமாவில் வாய்ப்பு பெற்றதாகவும், அவருடைய மகன்தான் ராமச்சந்திரன். இவர் கனகாவுக்கு பிஏ-வாக இருந்து வந்தார். கனகாவுடன் படப்பிடிப்புக்கு செல்வது, அவர் நடிக்கும் படங்களின் கதைகளை கேட்பது, அவரின் சம்பளம் உள்ளிட்ட அனைத்தையும் மிகவும் நேர்மையாக செய்து வந்துள்ளார். பின்னர் கனகா இவரை மரியாதையாக நடத்தும் விதத்தை பார்த்து, ராமச்சந்திரனுக்கு கனகா மீது காதல் ஏற்பட்டுள்ளது. அவர் பல வருடங்கள் ஒருதலையாகவே கனகாவை காதலித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் ராமச்சந்திரனை தவறாக புரிந்து கொண்ட கனகா, அவரை போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன் என கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.
சில வருடங்கள் கழித்து ராமச்சந்திரன் இறந்து விட்டதாகவும், அதன் பின்பே கனகாவுக்கு ராமச்சந்திரன் எந்த அளவுக்கு தன்னை உண்மையாக காதலித்தார் என்கிற தகவல் தெரியவந்தது. இதனால் மனம் உடைந்து போன கனகா, சினிமாவும் வேண்டாம்,, எதுவும் வேண்டாம் என எண்ணி தன்னை தானே சிறை வைத்துக்கொண்டு தனிமையில் வாழ்ந்து வருகிறார் என செய்யாறு பாலு கூறியுள்ளார் இந்த தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.