அட கடவுளே... பணத்துக்காக வயசு வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட நடிகைகள்! யார் யார் தெரியுமா?
70பது மற்றும் 80பது காலகட்டங்களில்.. மிகவும் வயதானவர்களை வீட்டிலேயே பெற்றோர் திருமணம் செய்து வைப்பது வழக்கமானது. சில சமயங்களில் சொத்து பிரிந்து போய் விட கூடாது என்பதற்காகவும் வயசு வித்தியாசம் பார்க்காமல் திருமணங்கள் நடைபெறுவது உண்டு.
70பது மற்றும் 80பது காலகட்டங்களில்.. மிகவும் வயதானவர்களை வீட்டிலேயே பெற்றோர் திருமணம் செய்து வைப்பது வழக்கமானது. சில சமயங்களில் சொத்து பிரிந்து போய் விட கூடாது என்பதற்காகவும் வயசு வித்தியாசம் பார்க்காமல் திருமணங்கள் நடைபெறுவது உண்டு.
love marriage
ஆனால் காலம் மாற மாற, மணமகனுக்கும் - மணமகளுக்கும் அதிக பச்சம் 5 வயது வித்தியாசம் இருப்பவர்களை தான் திருமணம் செய்ய வேண்டும் என, ஒரு வழக்கம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம், 2 அல்லது 3 வயது வித்தியாசம் இருப்பவர்களை மட்டுமே பெண்கள் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்கள். ஒரு சிலர் தங்களை விட இளைய வயது ஆண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதையும் பார்க்க முடிகிறது.
ஆனால் திரைபிரபலன்கள், அழகு... வயது போன்ற எதையும் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டால் மட்டும் அவர்கள் பணத்துக்காக திருமணம் செய்து கொண்டதாக விமர்சனங்கள் எழுகிறது. சரி அப்படி, வயசு வித்தியாசம் பார்க்காமல் பணத்துக்காக திருமணம் செய்து கொண்ட... சில தமிழ் நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நஸ்ரியா:
தமிழ் சினிமாவில் 'நேரம்' படத்தின் மூலம் பிரபலமான நஸ்ரியாவுக்கு 'ராஜா ராணி' திரைப்படம் திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் தேடி வந்துகொண்டிருந்த நிலையில், திடீர் என மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். 21 வயதில் 34 வயது நடிகரை இவர் திருமணம் செய்து கொண்டதால் பணத்துக்காக இவர் திருமணம் செய்து கொண்டதாகவே விமர்சனங்கள் எழுந்தது.
ரீமசென்:
மின்னலே படத்தின் படத்தின் ஒட்டு மொத்த தமிழ் இளம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் ரீமாசென். விஜய், சிம்பு, அருஜுன், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட இவர், கடந்த 2012 ஆம் ஆண்டு, மும்பையை சேர்ந்த 42 வயது தொழிலதிபர் தீப் கரண் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 9 வயது விதிசாயசத்தில், அழகை பொருட்படுத்தாமல் நடந்த இவர்களின் திருமணமும் பணத்துக்காக நடந்தது என விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
காதல் சந்தியா:
காதல் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை சந்தியா, முதல் படத்திலேயே தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். எனினும் காதல் படத்திற்கு பின்னர் இவர் நடித்த படங்கள், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாததால், தன்னுடைய 27 வயதில் IT நிறுவனம் நடத்தி வந்த கேரளாவை சேர்ந்த 41-வயது தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். தன்னை விட 14 வயது வித்தியாசம் கொண்ட நபரை சந்தியா திருமணம் செய்து கொண்டதால், இது பணத்துக்காக நடந்த திருமணமாகவே பார்க்கப்பட்டது.
மோனிகா:
தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் கதாநாயகியாக மாறியவர் மோனிகா. இவர் தன்னுடைய 27 வயதில் இஸலாம் மதத்திற்கு மாறி 50 வயது நபரை திருமணம் செய்து கொண்டார். 2015 ஆம் ஆண்டு இவரின் திருமணம் நடந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு ஒட்டு மொத்தமாக விலகினார். இவர் பணத்துக்கு ஆசை பட்டு தான் திருமணம் செய்ததாக தற்போது வரை பேச்சு அடிபட்டு வருகிறது.
நீலிமா ராணி:
சின்னத்திரம் மற்றும் வெள்ளித்திரையில் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளது மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் நீலிமா இசை. இவர் தன்னை விட வயது மூத்தவரை திருமணம் செய்து கொண்டதால், இவரும் பணத்துக்கு ஆசை பட்டு தான் திருமணம் செய்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது. பின்னர் பல முறை பேட்டிகளில் இது காதல் திருமணம் என்றும், காதலுக்கு வயசு தெரியாது என கூறி பதிலடியும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹாலக்ஷ்மி:
சீரியல் நடிகை மஹாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இடையே வயது மிகப்பெரிய பொருட்டு இல்லை என்றாலும், ரவீந்தர் மிகவும் குண்டான உடல் வாகு கொண்டவர். எனவே இவரை பணத்துக்காக தான் மஹாலட்சுமி திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.