செயற்கை நுண்ணறிவு (AI) மனிதகுலத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 10 முதல் 20% வரை வாய்ப்பு இருப்பதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜெஃப்ரி ஹிண்டன் மதிப்பிட்டுள்ளார்.
மேம்பட்ட AI தொழில்நுட்பம் மனிதக் கட்டுப்பாட்டை மீறி வளர்ந்து வரும் ஆபத்து குறித்து இந்த இரண்டு நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை, ஒரு புலிக்குட்டியை வளர்ப்பதோடு ஒப்பிடுகிறார் ஹிண்டன். அது வளர்ந்த பிறகு, நம்மைக் கொல்லக்கூடிய கொடிய விலங்காக மாறக்கூடும் என்கிறார்.
1986-ல் நியூரல் நெட்வொர்க்குகள் குறித்து இவர் செய்த ஆய்வுதான், இன்றைய முன்னணி AI தொழில்நுட்பங்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
ஆட்டோ ஷாங்காய் 2025 கண்காட்சியில், செரி (Chery) நிறுவனம் உருவாக்கிய ஒரு ஹியூமனாய்டு ரோபோ, நிஜ உலகில் செயல்படும் தனது திறன்களை வெளிப்படுத்தியது.
மருத்துவப் படங்களைப் பயன்படுத்தி நோய்களைக் கண்டறிவதில், AI விரைவில் மருத்துவர்களை விட சிறப்பாகச் செயல்படும் என்று ஹிண்டன் கணித்துள்ளார்.
வழக்கமான கல்வி முறையை விட, தனிப்பயனாக்கப்பட்ட AI ட்யூட்டர்கள் மூலம் மூன்று முதல் நான்கு மடங்கு வேகமாக கற்றுக்கொள்ள முடியும்.
அடுத்த 5 முதல் 20 ஆண்டுகளுக்குள் செயற்கை பொது நுண்ணறிவு (AGI) உருவாகக்கூடும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் AI பாதுகாப்பு நடவடிக்கைகளை விட லாபத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக ஹிண்டன் கடுமையாக விமர்சிக்கிறார்.
முன்னணி AI நிபுணர்கள் அறிக்கையில், AI ஆபத்து பெருந்தொற்று மற்றும் அணு ஆயுதப் போர் போன்ற அச்சுறுத்தல்களுக்கு இணையானது என எச்சரித்துள்ளனர்!