வீட்டுத் தோட்டத்திலேயோ, தொட்டியிலேயோ வெச்ச கறிவேப்பிலை செடி சரியா வளரலையா? செடி நல்லா செழிப்பா வளர சில எளிய டிப்ஸ்களைப் பார்க்கலாம்.
கறிவேப்பிலை செடி நல்லா வளர புளித்த மோர் ஒரு சூப்பர் உரம். கொஞ்சம் புளித்த மோர் அல்லது தயிரை தண்ணியில நல்லா கலந்து, செடியோட வேர்ப் பகுதியில ஊத்துங்க.
கஞ்சித் தண்ணியைக் கீழே ஊத்தாம, ஒரு பாத்திரத்துல ரெண்டு மூணு நாள் புளிக்க வைங்க. அப்புறம், அதுல சம அளவு தண்ணி கலந்து செடியோட வேர்ல ஊத்தலாம்.
கறிவேப்பிலை செடி உயரமா மட்டும் போகாம, பக்கவாட்டுல கிளைகள் விட்டு புதர் மாதிரி வளர, அதோட நுனிகளை அப்பப்போ கிள்ளி விடுறது ரொம்ப நல்லது.
கறிவேப்பிலை செடிக்கு நல்ல சூரிய ஒளி தேவை. தினமும் குறைஞ்சது 5-6 மணி நேரமாவது நேரடி வெயில் படுற இடத்துல செடியை நடணும்.
மண்ணுல எப்பவும் ஈரம் இருக்கணும். ஆனா, தண்ணீர் தேங்கி நிக்கக் கூடாது. அப்படி நின்னா வேர் அழுகிடும். மேல் மண் காய்ஞ்சதுக்கு அப்புறம் அடுத்த முறை தண்ணி ஊத்துனா போதும்.
ஒரு லிட்டர் தண்ணியில ஒரு டீஸ்பூன் எப்சம் சால்ட் கலந்து, மாசத்துக்கு ஒரு தடவை இலைகள் மேல தெளிக்கலாம். இல்லைனா செடியோட வேர்ப் பகுதியில ஊத்தலாம்.
பயன்படுத்தின டீ தூளை கழுவி காயவெச்சு, அதோட நல்லா பொடி செஞ்ச முட்டை ஓட்டையும் கலந்து, கறிவேப்பிலை செடியோட மண்ணுல போட்டா, செடிக்குத் தேவையான நைட்ரஜன், கால்சியம் சத்து கிடைக்கும்.
கறிவேப்பிலை செடியைத் தாக்கும் பூச்சிகளை விரட்டவும், செடி ஆரோக்கியமா இருக்கவும் பெருங்காயம் கலந்த தண்ணியைத் தெளிப்பது ரொம்ப நல்லது.
மாசத்துக்கு ஒருமுறை, செடியோட வேர்ப் பகுதியில மண்ணை லேசா கிளறிவிட்டு, கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு, எலும்புப் பொடி சேருங்க. இது நோய்கள், பூச்சிகளிடமிருந்து செடியைப் பாதுகாக்கும்.