life-style

பயன்படுத்திய டீத்தூளை தூக்கி எறியாதீங்க

பொதுவாக டீ வைத்தவுடன் டீத்துளை தூக்கி ஏறிய வேண்டாம். அதில் இருந்து கிடைக்கும் பல்வேறு பலன்கள் குறித்து பார்க்கலாம்.

Image credits: Google

வடிகட்டிய டீத்தூள்

விருந்தினர் வந்தவுடன் நாம் முதலில் தயாரிப்பது டீ தான். ஆனால், டீ வடிகட்டிய பின்னர் தூக்கி ஏறிந்து விடுகிறோம். இனி அப்படி செய்ய வேண்டாம்.

உரமாக பயன்படுத்தலாம்

வடிகட்டிய டீத்தூளை கழுவி வெயிலில் உலர்த்தி, அதை செடிகளின் மண்ணில் சிறிது சிறிதாக கலக்கவும். மணி பிளாண்ட், ரோஜா போன்ற தாவரங்களுக்கு சிற இது சிறந்த உரமாகும்.

சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்

மீதமுள்ள டீத்தூளை கழுவி மீண்டும் கொதிக்க வைக்கவும். இந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, கண்ணாடி மற்றும் கண்ணாடி பாத்திரங்களை சுத்தம் செய்யலாம். 

முடிக்கு பயன்படுத்தலாம்

வடிகட்டிய டீத்தூள் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். முடியை ஆரோக்கியமாக, பளபளப்பாக மாற்றுகிறது. மருதாணியுடன் கலந்து முடிக்கு தடவலாம் அல்லது அதன் தண்ணீரில் முடியைக் கழுவலாம்.

ஈக்கள், பூச்சிகளை விரட்டலாம்

ஈக்கள் மற்றும் பூச்சிகளை விரட்டுவதற்கு வடிகட்டிய டீத்தூளை மீண்டும் கொதிக்க வைத்து, வடிகட்டி, இந்த நீரில் பூச்சிகள், ஈக்களை விரட்ட துடைப்பதற்கு பயன்படுத்தலாம். 

காய்கறி கட்டர் சுத்தம் செய்யலாம்

காய்கறி பலகையை சுத்தம் செய்ய ஒரு டீஸ்பூன் பாத்திரம் கழுவும் திரவத்துடன் எலுமிச்சை சாறு கலக்கவும். இதைக் கொண்டு பலகையை சுத்தம் செய்யவும்.

கால் துர்நாற்றத்தை அகற்ற

டீத்தூளை தயிரில் கொதிக்க வைத்து, வடிகட்டி வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். 10-15 நிமிடங்கள் கால்களை நனைத்து வைக்கவும். இது கால்களின் துர்நாற்றத்தைப் போக்கும்.  

Find Next One