இந்த பழைய காலத்து எளிய டிப்ஸ்களைப் பயன்படுத்தினால், மீனின் வழவழப்புத்தன்மையும், கவுச்சி வாடையும் மாயமாகி, குழம்பு மணக்க மணக்க இருக்கும்.
Image credits: Getty
Tamil
சோள மாவு, எலுமிச்சை சாறு
ஒரு கப் சோள மாவுடன், மூன்று டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, மீன் துண்டுகளில் நன்றாகத் தேய்க்கவும். இது மீனின் வழவழப்பு மற்றும் கெட்ட வாடையை முழுமையாக நீக்கிவிடும்.
Image credits: Getty
Tamil
பால் அல்லது தயிர்
மீன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு கிளாஸ் பால் அல்லது சிறிது தயிர் சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கவுச்சி வாடை இருக்காது.
Image credits: Getty
Tamil
வினிகர் ட்ரிக்
சில வகை மீன்களில் கவுச்சி வாடை அதிகமாக இருக்கும். அந்த மாதிரி சமயங்களில், ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது வினிகர் கலந்து மீனை கழுவினால், வாடை சுத்தமாகப் போய்விடும்.
Image credits: Getty
Tamil
சமைக்கும்போது இதைச் செய்யுங்க!
மீன் குழம்பு செய்யும்போது, கொஞ்சம் அதிகமாக இஞ்சி-பூண்டு விழுது, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். இது வாடையை நீக்குவதோடு, குழம்பின் சுவையையும் இரண்டு மடங்காக்கும்.