நாம் வாங்கி வைக்கும் அரிசியில் கொஞ்ச நாளிலேயே வண்டு, புழு வந்துவிடுகிறதா? கவலை வேண்டாம். கெமிக்கல் எதுவும் இல்லாமல், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதை சுலபமாக விரட்டலாம்.
அரிசி வைத்திருக்கும் டப்பாவில் 4-5 பிரியாணி இலைகள், 8-10 கிராம்புகளைப் போட்டு வையுங்கள். அதன் வாசணை புழு, வண்டுகளுக்குப் பிடிக்காது. அவை உடனடியாக அரிசியை விட்டு வெளியேறிவிடும்.
Image credits: social media
Tamil
தோல் உரிக்காத பூண்டு
பூண்டின் 5-6 பற்களைத் தோல் உரிக்காமல், அரிசியின் நடுவில் புதைத்து வையுங்கள். பூண்டு காய்ந்த பிறகு, அதை எடுத்துவிட்டு புதிய பற்களை வைக்கலாம். பூண்டின் நெடி, வண்டுகளை அண்டவிடாது.
Image credits: Getty
Tamil
வேப்பிலையின் மேஜிக்
காய்ந்த வேப்பிலைகளை ஒரு மெல்லிய பருத்தித் துணியில் கட்டி, அரிசி டப்பாவிற்குள் வைத்துவிடுங்கள். வேப்பிலை அரிசியில் புழு, வண்டுகள் உருவாகாமல் தடுக்கும்.
Image credits: Getty
Tamil
காய்ந்த மிளகாய் போதும்
அரிசியில் 3-4 முழு காய்ந்த மிளகாய்களைப் போட்டு வையுங்கள். மிளகாயின் காரமான வாசனைக்கு, அரிசியில் மறைந்திருக்கும் வண்டுகள் வெளியே வந்துவிடும்.
Image credits: Getty
Tamil
வெயிலில் உலர்த்துங்கள்
அரிசியில் வண்டு, புழுக்களின் தொல்லை அதிகமாக இருந்தால், அதனை ஒரு துணியில் பரப்பி 2-3 மணி நேரம் நல்ல வெயிலில் வையுங்கள். வெப்பத்தை தாங்க முடியாமல் புழுக்கள் தானாகவே வெளியேறிவிடும்.