நம்ம வீட்டு செடிகள் சில சமயம் வளர்ச்சி குன்றி காணப்படும். எவ்வளவு உரம் போட்டும் பலன் கிடைக்காத போது, 'டிஸ்பிரின்' அல்லது 'ஆஸ்பிரின்' மாத்திரை செடிகளுக்கு புத்துயிர் கொடுக்கும்.
life-style Apr 09 2026
Author: Ramprasath S Image Credits:our own
Tamil
டிஸ்பிரின்ல அப்படி என்ன இருக்கு?
டிஸ்பிரின் மாத்திரையில் 'சாலிசிலிக் அமிலம்' (Salicylic Acid) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது செடிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அவற்றை வலிமையாக்குகிறது.
Image credits: Freepik
Tamil
எப்படி பயன்படுத்துவது?
4 லிட்டர் தண்ணீரில் 1-3 டிஸ்பிரின்/ஆஸ்பிரின் மாத்திரைகளை போட்டு முழுமையாக கரையும் வரை தண்ணீரில் நன்கு கலக்கவும். இந்த கரைசலை செடியின் இலைகள் மீது ஸ்ப்ரே செய்யுங்கள்.
Image credits: chat gpt
Tamil
செடியின் வளர்ச்சியை வேகப்படுத்த!
வறட்சி, அதிகப்படியான வெயில், பூச்சி தாக்குதல் போன்ற பிரச்சனைகளால் செடி பாதிக்கப்படும்போது, இந்த சாலிசிலிக் அமிலம் செடியைப் பாதுகாக்கிறது. செடியின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கிறது.
Image credits: Getty
Tamil
சரியான நேரம் எது?
நண்பகல் வெயிலில் இந்த ஸ்ப்ரேயை பயன்படுத்த வேண்டாம். காலை அல்லது மாலை வேளையில் தெளிப்பது சிறந்தது. ஒவ்வொரு 2 முதல் 3 வாரங்களுக்கு ஒருமுறை இந்த முறையைப் பின்பற்றலாம்.
Image credits: GEMINI AI
Tamil
இதோட நன்மைகள் என்னென்ன?
செடிகள் வேகமாக வளரும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, பூச்சித் தொல்லைகள் குறையும்.
செடிகளில் அதிக பூக்கள் மற்றும் பழங்கள் காய்க்க இது உதவும்.