அரிசி நீரை இப்படி யூஸ் பண்ணுங்க... முடி அடர்த்தியா வளரும்!
health-beauty Sep 05 2026
Author: Asianet News Image Credits:Getty
Tamil
அரிசி நீரில் ஹேர் கேர்
அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் முடி பராமரிப்புக்குப் பயன்படுத்தலாம். இது உங்கள் கூந்தலை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.
Image credits: Getty
Tamil
தயாரிப்பது எப்படி?
ஒரு கப் அரிசியைக் கழுவி, இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை வடிகட்டிப் பயன்படுத்தலாம்.
Image credits: Getty
Tamil
எப்படிப் பயன்படுத்துவது?
ஷாம்பு போட்டு தலைக்குக் குளித்த பிறகு, அரிசி நீரை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி சில நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு, சாதாரண நீரில் முடியை அலச வேண்டும்.
Image credits: Getty
Tamil
வாரத்திற்கு எத்தனை முறை?
அரிசி நீரை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதும். தினமும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
Image credits: Getty
Tamil
கூந்தல் ஆரோக்கியம்
முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர அரிசி நீர் சிறப்பாக உதவுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
Image credits: freepik
Tamil
இது ரொம்ப முக்கியம்!
முதல் முறை அரிசி நீரை பயன்படுத்தும்போது, பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம். அரிப்பு, எரிச்சல் அல்லது சிவத்தல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும்.