கோடைகால வெயில் கருமையை நீக்க 7 எளிய இயற்கை ஃபேஸ் பேக்குகள்!
health-beauty May 22 2026
Author: Priya Velan Image Credits:Getty
Tamil
தக்காளி மற்றும் சந்தனப் பொடி:
தக்காளியின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கருமையைக் குறைக்கும் சந்தனம் குளிர்ச்சி தரும். இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவினால் சருமம் பொலிவும் புத்துணர்ச்சியும் பெறும்
Image credits: Getty
Tamil
பப்பாளி மற்றும் எலுமிச்சை சாறு:
பழுத்த பப்பாளிப் பழத்தை மசித்து, அதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பப்பாளியில் உள்ள இயற்கை என்சைம்கள் இறந்த செல்களை நீக்க, எலுமிச்சை சாறு சரும நிறத்தை மேம்படுத்தும்.
Image credits: Getty
Tamil
கஸ்தூரி மஞ்சள் மற்றும் தேன்:
மஞ்சள், தேன் கலவையை முகத்தில் தடவினால், மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளும், தேனின் ஈரப்பதமூட்டும் தன்மையும் இணைந்து வெயிலால் ஏற்பட்ட கருமையை விரைவாகக் குணமாக்கும்.
Image credits: Getty
Tamil
கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய்:
சூரிய ஒளியால் காய்ந்துபோன சருமத்திற்கு வெள்ளரிக்காய் சாற்றுடன் கற்றாழை ஜெல்லைக் கலந்து முகத்தில் தடவவும். இது சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருப்பதுடன், எரிச்சலையும் தணிக்கும்.
Image credits: Getty
Tamil
தயிர் மற்றும் குங்குமப்பூ:
தயிரில் குங்குமப்பூ இதழ்களை 10 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் அதை முகத்தில் தடவ வேண்டும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக்கி, கருமையை நீக்கி பிரகாசமடையச் செய்யும்.
Image credits: Getty
Tamil
அரிசி மாவு மற்றும் பால்:
அரிசி மாவை பாலுடன் கலந்து ஒரு பேஸ்ட் போல செய்து, முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். இது ஒரு சிறந்த இயற்கை ஸ்க்ரப் போல செயல்பட்டு, சருமத்திற்கு பொலிவைத் தரும்.
Image credits: Getty
Tamil
முல்தானி மட்டி மற்றும் ரோஸ் வாட்டர்:
எண்ணெய் சருமத்திற்கு முல்தானி மட்டி சிறந்தது. அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி, குளிர்ந்த நீரால் கழுவினால் சருமத்தில் உள்ள எண்ணெயை நீங்கி, உடனடி பிரகாசத்தைத் தரும்.