Asianet News TamilAsianet News Tamil

Watch : பஞ்சாங்குளத்தில் நுழைவதற்கு 5 பேருக்கு நீதிமன்றம் தடை; முதன் முறையாக தமிழ்நாட்டில் அமல்!!

பாஞ்சாங்குளத்தில் மேலும் வன்முறை நடைபெறாமல் தடுக்கவே குற்றவாளிகளை ஊருக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக அரசு வழக்கறிஞர் கந்தசாமி தெரிவித்தார்.
 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பாஞ்சாங்குளத்தில் சிறுவர்களிடம் சாதி தீண்டாமையை வெளிப்படுத்திய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் அங்கு கடை நடத்தி வரும் நிலையில் அந்த கடையில் திண்பண்டம் வாங்க சென்ற சிறுவர்களுக்கு ஊர் கட்டுப்பாட்டை காரணம் காட்டி திண்பண்டம் கொடுக்க முடியாது என்று சிறுவர்களிடம் ஜாதி தீண்டாமையை வெளிப்படுத்தியிருந்தனர்.

இது தொடர்பாக கரிவலம் வந்த நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமாச்சந்திர மூர்த்தி,  குமார் மகேஷ்வரன் ஆகிய  குற்றவாளிகளை கைது செய்தனர்.  மேலும் முருகன், சுதா ஆகிய  இருவரை தேடி வரும் நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ஊருக்குள்ள நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு மீதான விசாரணை இன்று நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி பத்பநாபன்  குற்றவாளிகள் 5 பேருக்கு  6 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து, அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

திமுகவில் இருந்து சுப்புலெட்சுமி ஜெகதீசன் வெளியேறியது ஏன்..? அடுத்தது யார்..? ஆர்.பி உதயகுமார் புதிய தகவல்
 

தமிழகத்தில் முதல் முறையாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை ஊருக்குள் நுழைய தடை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இந்த வழக்கில் வாதாடிய அரசு வழக்கறிஞர் கந்தசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர் அதில் இது போன்ற மேலும் பல சாதி பாகுபாடு சம்பவம் நடைபெற்றதாக போலீசார் உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். எனவே அப்பகுதியில் மேலும் வன்முறை நடைபெறாமல் தடுக்கவும் சம்பந்தப்பட்டவர்களின் உடமைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் நீதிமன்றம் மூலம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஐந்து பேரும் ஆறு மாதங்கள் பாஞ்சாகுளம் கிராமத்துக்குள் நுழைவதற்கு தடை பெறப்பட்டுள்ளது. 

போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் காலை வைத்து பாருடா நாயே.. ஆ.ராசாவை மிரட்டிய பாஜக மாவட்ட தலைவர் கைது.!
 

இந்த சட்டப்பிரிவின்படி அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை குற்றவாளிகள் ஊருக்குள் நுழையாமல் தடை விதிக்க முடியும். இந்த வழக்கில் போலீசார் ஒரு வருட காலம் குற்றவாளிகள் ஊருக்குள் அனுமதிக்க கூடாது என்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர். தற்போது நீதிபதி ஆறு மாத காலம் தடை விதித்துள்ளார்'' என்றார். 

சாத்தான்குளம் தந்தை மகனை காவலர்கள் தொடர்ச்சியாக கடுமையாக தாக்கினர்: தலைமை காவலர் சாட்சியம்!!
 

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இது போன்ற ஒரு பிரிவு இருப்பது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஐஜி அஸ்ராகார்க் எடுத்துள்ள முயற்சி காரணமாக இந்த சட்டப்பிரிவு முதல் முறையாக செயல்பாட்டிற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories