பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து - 53 பேர் பலி!

Asianet News Tamil  
Published : Oct 23, 2016, 12:20 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து - 53 பேர் பலி!

சுருக்கம்

Cameroon நாட்டில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 50-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைகிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Cameroon தலைநகர் Yaounde-வில் இருந்து துறைமுக நகரான Douala-விற்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று, Eseka என்னும் ரயில் நிலையம் அருகே வந்தபோது ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. இவ்விபத்தில் 53 பேர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்‍கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 9 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலில் கூடுதலாக பயணிகளை ஏற்றுவதற்காக மேலும் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டதே இந்த விபத்து ஏற்பட காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

அமெரிக்காவை நம்ப முடியாது..! போரில் சமரசமே கிடையாது..! அமெரிக்காவுக்கு ஈரான் அதிரடி எச்சரிக்கை..!
ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது.. 100 ராணுவ வீரர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!