15 வயது மாணவனுடன் 41 வயது டீச்சருக்கு ஏற்பட்ட பயங்கர காதல்... அடிக்கடி உடலுறவு... கர்ப்பம், விசாரணையில் பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Oct 11, 2021, 12:16 PM IST
Highlights

அவர் மீது வந்த புகாரையடுத்து, அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பாக கடந்த 7 மாதங்களாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் அதே பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுவனுடன் ஆசிரியை ஹாரி கால்வி அடிக்கடி உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார், 

கடந்த வாரம் 14 வயது சிறுவனுடன் உடலுறவில் ஈடுபட்ட ஆசிரியை ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தற்போது 15 வயது மாணவனுடன் 41 வயதான பள்ளி ஆசிரியை உல்லாசத்தில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது அந்த ஆசிரியை கர்ப்பமாக இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஏழு மாதங்களாக போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த ஆசிரியை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் இந்தச் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஹாரி கால்வி (41)  என்ற ஆசிரியை  தெற்கு புளோரிடாவில் டோரலில் உள்ள ஜான் ஸ்மித் கே-8 பள்ளியில்  ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் டோரல் போலீசாருக்கு ஆசிரியர் மீது கடந்த மார்ச் மாதம் ஒரு மாணவனின் பெற்றோர்களிடம் இருந்து புகார் ஒன்று வந்தது. அதாவது அந்த ஆசிரியை15 வயது பள்ளி மாணவனுடன் தகாத உறவு வைத்திருப்பதாகவும் அதேபோல் சட்டத்துக்கு விரோதமாக அவர் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. 

இதையும் படியுங்கள்: கொஞ்சம் கூட அடங்காத துரைமுருகன்.. முதல்வர் ஸ்டாலின் குறித்து இழிவு பேச்சு.. தூக்கி உள்ளே வைத்தது போலீஸ்.

அவர் மீது வந்த புகாரையடுத்து, அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பாக கடந்த 7 மாதங்களாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் அதே பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுவனுடன் ஆசிரியை ஹாரி கால்வி அடிக்கடி உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார், இவர் அந்த சிறுவனை அடிக்கடி தனி அறைக்கு அழைத்து சென்று, இருவரும் ஆடை இல்லாமல் உடல் உறவில் ஈடுபட்டுள்ளனர், இருவரும் நிர்வாணமாக இருக்கும்போது புகைப்படங்கள் எடுத்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டுள்ளனர், இந்த உறவு பல மாதங்களாக நடைபெற்று வந்துள்ளது, அதேபோல் இருவரும் ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ என்று குறுஞ்செய்தி பகிர்ந்துள்ளனர். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்த ஆசிரியை போலீசார் கைது செய்தனர். தற்போது ஆசிரியை ஹாரி கால்வி  கர்ப்பமாக இருப்பதும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

இதையும் படியுங்கள்: அடகடவுளே.. இந்த தக்காளிக்கு வந்த வாழ்வை பாருங்க ..? ஒரு கிலே 80 ரூபாய்க்கு விற்பணை..

இந்நிலையில் அந்த ஆசிரியை வேறு எந்த இடத்திற்கும் வேலைக்கு செல்ல முடியாதபடி அவருக்கு தடை விதிப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அந்த ஆசிரியர் குறித்து கருத்து தெரிவித்துள்ள சில மாணவிகள், அந்த ஆசிரியை மிக சிறப்பானவர், நல்ல முறையில் பாடம் கற்பிக்க கூடியவர், ஆனால் அவர் இப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டார் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளனர். ஆசிரியையின் கணவர் அப்பகுதியில் போக்குவரத்து காவலராக இருப்பதால் துப்பாக்கியை வைத்திருப்பதாகவும், அவர் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த ஓராண்டு காலத்தில் தெற்கு புளோரிடாவில் சிறுவர்களுடன் உடலுறவில் ஈடுபட்ட அல்லது தகாத உறவில் இருந்த இதுவரை மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!