இந்தியா, யுஏஈ வர்த்தகத்திற்கு இரு நாடுகளின் நாணயங்கள் பயன்படுத்த பிரதமர் மோடி முன்பு ஒப்பந்தம்!!

Published : Jul 15, 2023, 04:56 PM ISTUpdated : Jul 15, 2023, 05:09 PM IST
இந்தியா, யுஏஈ வர்த்தகத்திற்கு இரு நாடுகளின் நாணயங்கள் பயன்படுத்த பிரதமர் மோடி முன்பு ஒப்பந்தம்!!

சுருக்கம்

இந்திய ரிசர்வ் வங்கியும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்திய வங்கியும் தங்களது நாணயங்களை இரண்டு நாடுகளின் வர்த்தகங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கியும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்திய வங்கியும் தங்களது நாணயங்களை இரண்டு நாடுகளின் வர்த்தகங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் இருதரப்பு பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இருதரப்பு, எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின்  திர்ஹாம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக ஒரு கட்டமைப்பை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ரிசர்வ் வங்கியும் யுஏஇ மத்திய வங்கியும் ஜூலை 15 அன்று கையெழுத்திட்டன. 

இரண்டு மத்திய வங்கிகளும் ஒன்றுக்கொன்று பணம் செலுத்துதல் மற்றும் குறுஞ்செய்திகளை பகிர்ந்து கொள்ளுதல் அமைப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இருதரப்பு பரிவர்த்தனைகளுக்கு ரூபாய், திர்ஹாம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பில் யுஏஈ-ன் மத்திய வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் உள்ளூர் நாணயத்தை பயன்படுத்துவதற்கான தீர்வு ஏற்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்து நடப்பு கணக்கு பரிவர்த்தனைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட மூலதன கணக்கு பரிவர்த்தனைகளை உள்ளடக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எனது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை வெற்றியுடன் முடித்துக் கொண்டுள்ளேன். இருநாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்பான வரவேற்பு அளித்த ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!