பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சல்லி சல்லியான சாலை... 5 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

Published : Sep 24, 2019, 06:33 PM IST
பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சல்லி சல்லியான சாலை... 5 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

சுருக்கம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் கூறுகையில் பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகருக்கு வடகிழக்கே 173 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 6.1-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 10 கிமீ. இந்த நிலநடுக்கம் 8 முதல் 10 நொடிகள்வரை நீடித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். மேலும், பல நகரங்களில் கட்டிடங்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. காஷ்மீர், பஞ்சாப், டெல்லி மற்றும் வட இந்திய மாநிலங்களின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரை தடுக்க பாகிஸ்தானுக்கு அல்லாஹ் வந்து உதவினார்..! இந்தியாவை பலவீனமாகக் காட்டும் அசீம் முனீர்..!
அமெரிக்கா போனா திரும்ப முடியாதா.? கூகுள்–ஆப்பிள் எச்சரிக்கை.. அதிர்ச்சி செய்தி