சீனாக்காரன் உள்ளே வராதே...!! எஜமானனையே எகிறி அடிக்கும் இலங்கை...!!

Published : Jan 28, 2020, 06:02 PM IST
சீனாக்காரன் உள்ளே வராதே...!!  எஜமானனையே எகிறி அடிக்கும்  இலங்கை...!!

சுருக்கம்

சீனப்பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா வழங்கும் கொள்கையை ரத்து செய்ய இலங்கை சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

இலங்கையில்  கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டதை அடுத்து சீனப் பயணிகளுக்கு விசா வழங்குவதை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது . அறிவியல் மருத்துவம் கண்டுபிடிப்பு என மிக வேகமாக வளர்ந்து வரும் சீனாவுக்கு , கொரோனா  வைரஸால் மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த காய்ச்சலால் சுமார் 106 பேர் உயிரிழந்துள்ளனர் .  இது சீனாவையே நிலைகுலைய வைத்துள்ளது .  

இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் இந்த வைரஸை தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என கைவிரித்து உள்ளார் . இந்நிலையில்  மற்ற நாடுகளுக்கு செல்லும் சீனப் பயணிகள் அந்தந்த நாட்டு விமான நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் . அவர்கள் விமான நிலையங்களில்  தெர்மல் டெஸ்ட் முறையில் பரிசோதனை செய்யப்படுகின்றனர் . இந்நிலையில் அமெரிக்கா , ஆஸ்திரேலியா ,இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.   இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக சீன பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா வழங்குவதை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது . 

இந்நிலையில் ஜனவரி 19-ம் தேதி சீனாவில் இருந்து இலங்கை வந்த 40 வயது சீனப்பெண் ஒருவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் ஜனவரி 25 அன்று இலங்கை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது கண்டறியப்பட்டார்,  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனது இலங்கை துணைத் தூதரக அமைச்சகத்தின் தொற்றுநோய்கள் நிபுணர்  சுராத் சுரவீரா தெரிவித்துள்ளார் . சீனப்பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா வழங்கும் கொள்கையை ரத்து செய்ய இலங்கை சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!