சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?

 
Published : Nov 17, 2017, 10:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?

சுருக்கம்

india first place in air pollution

சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கக்கூடிய கந்தக-டை-ஆக்ஸைடை அதிகளவில் காற்றில் கலக்கச் செய்வதில் உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டைவிட தற்போது 50% கந்தக-டை-ஆக்ஸைடு அதிகமாக வெளியேற்றப்படுகிறது.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் அதிகளவில் கந்தக-டை-ஆக்ஸைடை வெளியேற்றுவதில் முதலிடத்தில் சீனா இருந்தது. ஆனால், தற்போது சீனாவில் கந்தக-டை-ஆக்ஸைடின் வெளியேற்றம் 75% குறைந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் கந்தக-டை-ஆக்ஸைடின் வெளியேற்றம் 50% அதிகரித்து தற்போது, காற்று மாசுபாட்டில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

உலகளவில் நிலக்கரியை அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. நிலக்கரியின் மொத்த எடையில், 3% கந்தகம் உள்ளதால் அதைப்பயன்படுத்துவதால், இந்தியாவில் காற்று கடுமையாக மாசடைகிறது.

கந்தக-டை-ஆக்ஸைடு நச்சு காரணமாக இந்தியாவிலும் சீனாவிலும் மக்களின் ஆயுட்காலம் வெகுவாக குறைவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 3 கோடியே 30 லட்சம் பேரும் சீனாவில் 9 கோடியே 90 லட்சம் பேரும் கந்தக-டை-ஆக்ஸைடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே கந்தக-டை-ஆக்ஸைடின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலையும் மக்களையும் காக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கையை எடுக்க வேண்டியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

அமெரிக்கா போனா திரும்ப முடியாதா.? கூகுள்–ஆப்பிள் எச்சரிக்கை.. அதிர்ச்சி செய்தி
எப்ஸ்டீன் வழக்கில் புதிய திருப்பம்.. காணாமல் போன டிரம்ப் புகைப்படம்.. வெளியான முக்கிய ஆதாரம்