Vinayagar 108 Potri: விநாயகரின் 108 போற்றி..முழு பட்டியல் இதோ!

Published : Sep 13, 2026, 09:35 AM IST
vinayagar 108 potri

சுருக்கம்

Vinayagar 108 Potri: விநாயகரை நினைத்து வழிபடும்போது முதலில் நினைவுக்கு வருவது “போற்றி” எனும் பக்தி முழக்கம்தான். தடைகளை நீக்குபவர், வினைகளைத் தீர்ப்பவர், ஞானத்தை அருள்பவர், அச்சத்தைப் போக்குபவர் என விநாயகர் பல்வேறு திருநாமங்களால் போற்றப்படுகிறார். ஒவ்வொரு போற்றியையும் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளவோம்.

விநாயகரின் 108 போற்றி

  1. ஓம் விநாயகனே போற்றி
  2. ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
  3. ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
  4. ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
  5. ஓம் அமிர்த கணேசா போற்றி
  6. ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
  7. ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
  8. ஓம் ஆனை முகத்தோனே போற்றி
  9. ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி
  10. ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆனந்த உருவே போற்றி
  11. ஓம் ஆபத் சகாயா போற்றி
  12. ஓம் இமவான் சந்ததியே போற்றி
  13. ஓம் இடரைக் களைவோனே போற்றி
  14. ஓம் ஈசன் மகனே போற்றி
  15. ஓம் ஈகை உருவே போற்றி
  16. ஓம் உண்மை வடிவே போற்றி
  17. ஓம் உலக நாயகனே போற்றி
  18. ஓம் ஊறும் களிப்பே போற்றி
  19. ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
  20. ஓம் எளியவனே போற்றி
  21. ஓம் எந்தையே போற்றி
  22. ஓம் எங்குமிருப்பவனே போற்றி
  23. ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
  24. ஓம் ஏழை பங்காளனே போற்றி
  25. ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
  26. ஓம் ஐயனே போற்றி ஓம் ஐங்கரனே போற்றி
  27. ஓம் ஒப்பிலாதவனே போற்றி
  28. ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
  29. ஓம் ஒளிமய உருவே போற்றி
  30. ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
  31. ஓம் கருணாகரனே போற்றி
  32. ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
  33. ஓம் கணேசனே போற்றி
  34. ஓம் கணநாயகனே போற்றி
  35. ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
  36. ஓம் கலியுக நாதனே போற்றி
  37. ஓம் கற்பகத்தருவே போற்றி
  38. ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி
  39. ஓம் கிருபாநிதியே போற்றி
  40. ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
  41. ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
  42. ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
  43. ஓம் குணநிதியே போற்றி
  44. ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
  45. ஓம் கூவிட வருவோய் போற்றி
  46. ஓம் கூத்தன் மகனே போற்றி
  47. ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
  48. ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
  49. ஓம் கோனே போற்றி
  50. ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி
  51. ஓம் சடுதியில் வருபவனே போற்றி
  52. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
  53. ஓம் சங்கடஹரனே போற்றி
  54. ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
  55. ஓம் சிறிய கண்ணோனே போற்றி
  56. ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
  57. ஓம் சுருதிப் பொருளே போற்றி
  58. ஓம் சுந்தரவடிவே போற்றி
  59. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
  60. ஓம் ஞான முதல்வனே போற்றி
  61. ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
  62. ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
  63. ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
  64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி
  65. ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
  66. ஓம் தேவாதி தேவனே போற்றி
  67. ஓம் தொந்தி விநாயகனே போற்றி
  68. ஓம் தொழுவோ நாயகனே போற்றி
  69. ஓம் தோணியே போற்றி
  70. ஓம் தோன்றலே போற்றி
  71. ஓம் நம்பியே போற்றி
  72. ஓம் நாதனே போற்றி
  73. ஓம் நீறணிந்தவனே போற்றி
  74. ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
  75. ஓம் பழத்தை வென்றவனே போற்றி
  76. ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
  77. ஓம் பரம்பொருளே போற்றி
  78. ஓம் பரிபூரணனே போற்றி
  79. ஓம் பிரணவமே போற்றி
  80. ஓம் பிரம்மசாரியே போற்றி
  81. ஓம் பிள்ளையாரே போற்றி
  82. ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
  83. ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
  84. ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
  85. ஓம் புதுமை வடிவே போற்றி
  86. ஓம் புண்ணியனே போற்றி
  87. ஓம் பெரியவனே போற்றி
  88. ஓம் பெரிய உடலோனே போற்றி
  89. ஓம் பேரருளாளனே போற்றி
  90. ஓம் பேதம் அறுப்போனே போற்றி
  91. ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
  92. ஓம் மகிமையளிப்பவனே போற்றி
  93. ஓம் மகாகணபதியே போற்றி
  94. ஓம் மகேசுவரனே போற்றி
  95. ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
  96. ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
  97. ஓம் முறக்காதோனே போற்றி
  98. ஓம் முழுமுதற்கடவுளே போற்றி
  99. ஓம் முக்கணன் மகனே போற்றி
  100. ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி
  101. ஓம் மூத்தோனே போற்றி
  102. ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
  103. ஓம் வல்லப கணபதியே போற்றி
  104. ஓம் வரம்தரு நாயகனே போற்றி
  105. ஓம் விக்னேஸ்வரனே போற்றி
  106. ஓம் வியாஸன் சேவகனே போற்றி
  107. ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
  108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Lord Ganesha: விநாயகரின் வாகனம் ஏன் மூஞ்சூறு தெரியுமா? பின்னால் இருக்கும் கஜமுகாசுரன் கதை இதுதான்!
Naivedya Rules: சாமிக்கு வைத்த நைவேத்தியத்தை எப்போது எடுக்கணும்? இரவு முழுக்க வைத்தால் என்ன ஆகும்?