மண்ணால் ஆனதல்ல இந்த லிங்கம்! தாமரைத் தண்டு லிங்கத்தின் ரகசியமும், பெருமகளூர் கோயிலின் மகா மகிமையும்!

Published : Jan 22, 2026, 09:22 PM IST
Perumagalur Somanatha Swamy Temple Lotus stalk Lingam miracle History in Tamil

சுருக்கம்

Lotus stalk Lingam miracle History in Tamil : இக்கோயிலின் மூலவர் சோமநாதர், தாமரைத் தண்டினால் உருவானவர் என்பது ஐதீகம். இதற்கான தழும்புகளை லிங்கத் திருமேனியில் இன்றும் காணலாம்

Lotus stalk Lingam miracle History in Tamil : அறிவியலுக்கு சவால் விடும் வகையில் நம் தமிழ்நாட்டில் சிவலிங்கம் தாமரை தண்டினால் உருவாகியுள்ளது இந்த அதிசயத்தை வேறு எங்காவது நாம் பார்க்க முடியாது. சிவலிங்கம் உன் ஒன்று கல்லினால் உருவாக பட்டிருக்கும் இல்லையென்றால் களிமண்ணால் உருவாக்கப் பட்டிருக்கும் ஆனால் இங்கு அதிசயமாக தாமரை தண்டினால் முழுக்க முழுக்க உருவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்பெருமகளூர் சோமநாதர் கோயிலில் தாமரைத் தண்டு லிங்கம் உள்ளது. இந்த இதன் சிறப்புகளையும் வரலாறுகளையும் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

வரலாறு: 

பெருமகளூர் கிராமத்திலுள்ள குளத்தில் சோழ மன்னனின் யானை ஒன்று செந்தாமரையை பறிக்க முயன்ற போது குளம் முழுவதும் செந்நிறமாக மாறியது. இதை அறிந்த மன்னன் நீரை வெளியேற்றும் போது, அடியில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியில் சிவலிங்கத்தை இறுக்கமாகக் கட்டித் தழுவி வணங்கினான். இதை அடுத்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி, "சோமநாதர்' என பெயர் சூட்டினார். லட்சுமி வாசம் செய்யும் தாமரை மலர்கள் பூத்த குளத்தில், லிங்கம் கிடைத்ததால், இந்த குளத்திற்கு லட்சுமி தீர்த்தம் என பெயர் சூட்டப் பட்டது. லிங்கம் சுயம்புலிங்கமாக உருவானது.

தீர்த்தத்தின் சிறப்பு: 

இக்கோயில் அருகில் உள்ள லட்சுமி தீர்த்தமானது, சிவனது தலையிலிருந்து விழுந்த கங்கையிலிருந்து தோன்றியது ஆகும். இந்த லட்சுமி தீர்த்த்ததிலிருந்து தோன்றிய தாமரைத் தண்டிலிருந்து உருவானது தான் இத்தல லிங்கமாகும். இவ்வுலக மக்களுக்காக, திரிபுவன சித்தரின் தவ வலிமையால் இங்கு சிவனும் அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோயில் எழுப்பப்பட்டது.

பலன்கள்: 

இந்த கோயில் சந்திர தோசத்திலிருந்து விலகுவதற்கு ஒரு சிறந்த கோயிலாக கருதப்படுகிறது. குழந்தை வரம் வேண்டி கோயிலுக்கு சென்றால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. தீராத நோய் இருந்தால் கூட இந்த லட்சுமி தீர்த்தத்தில் நம் மீது பட்டால் விரைவில் குணமடையும் என்றும் கூறப்படுகிறது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஆன்மீகத்தில் அசத்தும் தமிழ் நடிகர்கள்! சொந்தமாக கோயில் கட்டி வியக்க வைத்த டாப் 6 சினிமா பிரபலங்கள்!
தோஷங்களை எரிக்கும் பொன்னேஸ்வரர்! பித்ரு தோஷ நிவர்த்தி தரும் பொன்னேஸ்வரமடம் திருத்தலம்!