சாணக்கியர் நீதி: உங்களை ஏழையாகவே வைத்திருக்கும் 4 இடங்கள் என்னென்ன?

Published : Jan 25, 2025, 08:36 AM ISTUpdated : Jan 25, 2025, 12:44 PM IST
சாணக்கியர் நீதி: உங்களை ஏழையாகவே வைத்திருக்கும் 4 இடங்கள் என்னென்ன?

சுருக்கம்

Chanakya Niti 4 Places that Keep People Poor : சாணக்கியர் நீதி: ஆச்சார்யர் சாணக்கியர் தனது நீதி நூலில், எந்த 5 இடங்களில் வசிப்பவர்கள் ஒருபோதும் பணக்காரர்களாக மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.  

Chanakya Niti 4 Places that Keep People Poor : இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவர் தான் ஆச்சார்யர் சாணக்கியர். இவர், தனது நீதிகளின் மூலம் ஒரு சாதாரண இளைஞரான சந்திரகுப்த மௌரியரை அகண்ட பாரதத்தின் பேரரசராக ஆக்கினார். அவர் கூறிய நீதிகள் இன்றைய காலத்திலும் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. ஆச்சார்யர் சாணக்கியர் தனது நீதி நூலில், எந்த 5 இடங்களில் வசிப்பவர்கள் எப்போதும் ஏழைகளாகவே இருப்பார்கள் என்று கூறியுள்ளார். இந்த இடங்களில் வசிப்பவர்களால் ஒரு நாள் கூட ரிச்மேனாக முடியாது. அந்த 5 இடங்கள் என்னவென்று தெரிந்து கொண்டு அங்கிருந்து ஒதுங்கியிருப்போம். எந்த 4 வேலைகளை முழுமையடையாமல் விடக்கூடாது? இல்லையெனில் பின்னர் வருத்தப்பட வேண்டியிருக்கும்.

இந்தியாவின் டாப் 7 பிரம்மாண்டமான கோயில்கள்; தமிழ்நாடு கோயில் இருக்கா?

வேலைவாய்ப்பு இல்லாத இடம்:

ஆச்சார்யர் சாணக்கியரின் கூற்றுப்படி, வேலைவாய்ப்பு இல்லாத இடத்தில் வசிப்பவர்கள் எப்போதுமே ஏழைகளாகவே இருப்பார்கள். ஏனெனில் அங்கு வருமானத்திற்கு உறுதியான வழி எதுவும் இல்லை. அப்படிப்பட்ட இடத்தில் வசிப்பவர்கள் சிறிய வேலைகளைச் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். இவர்கள் ஒருபோதும் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்காமல் வறுமையில் தங்கள் வாழ்க்கையை கழிக்கிறார்கள்.

தை 2025: திருமணங்கள் நடத்துவதற்கான சுப முகூர்த்த நாட்கள் பட்டியல்!

உறவினர்கள் இல்லாத இடம்

உறவினர்கள் இல்லாத இடத்தில் வசிப்பவர்களும் முன்னேற முடியாது. உறவினர்கள் இருக்கும் இடங்களைச் சுற்றி எப்போதும் சந்தோஷம் நிலைத்திருக்கும். உறவினர்கள் இல்லாத இடங்களில் வசிப்பவர்களால் தங்கள் வாழ்க்கையை தாழ்ந்த நிலையில் தொடங்கி அப்படியே முடித்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட இடத்தில் வாழ்வது நரகத்தில் வாழ்வதற்கு சமம். எனவே முன்னேற விரும்புபவர்கள் அப்படிப்பட்ட இடத்தை உடனடியாக விட்டு வெளியேற வேண்டும்.

ருத்ராட்சம் அணிந்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது?

கல்விக்கூடம் இல்லாத இடம்:

படிக்க எந்த பள்ளியோ அல்லது குருகுலமோ இல்லாத இடத்தில் வசிப்பவர்கள் ஒருபோதும் முன்னேற முடியாது. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்க்கும் கல்விக்கூடம் இல்லாத இடங்களில் குடியிருக்க கூடாது. கல்வி இல்லாமல் மரியாதையும் இல்லை. வேலைவாய்ப்பும் இல்லை. எனவே கல்வி இல்லாமல் வாழ்பவர்கள் எப்போதும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இடத்தில் வசிப்பது எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தும்.

இயற்கை சாதகமற்ற இடம்:

ஆச்சார்யர் சாணக்கியரின் கூற்றுப்படி, தண்ணீர், மரங்கள், விவசாய நிலம் போன்றவை இல்லாத இடத்தில் வசிப்பவர்களும் ஏழைகளாகவே இருப்பார்கள். இவர்களால் வாழ்க்கையில் ஒருபோதும் பணக்காரர்களாக மாற முடியாது. முன்னேற விரும்புபவர்கள் அப்படிப்பட்ட இடத்தை உடனடியாக விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில் அவர்களின் வாழ்க்கை அங்கேயே முடிந்துவிடும்.

உங்க கிச்சன்ல 'எந்த' கலர் பெயிண்ட்? கண்டிப்பா 'செல்வம்' குவியும்!!
 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!