நீங்கள் நினைத்தது நடக்க...காமதேனு சிலையை வீட்டில் வைத்து வழிபடுங்கள்..!!

Published : Jun 27, 2023, 09:25 PM IST
நீங்கள் நினைத்தது நடக்க...காமதேனு சிலையை வீட்டில் வைத்து வழிபடுங்கள்..!!

சுருக்கம்

நீங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் வீட்டில் காமதேனு சிலையை வைத்து வழிபாடு செய்து நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இந்து மதத்தை பின்பற்றுவோர் ஒவ்வொருவருடைய வீட்டிலும் பூஜை அறை இருக்கும். அந்த பூஜை அறையில் அவர்கள் வழிபடுவதற்கான சிலைகள் வைக்கப்படுகின்றன. அவ்வாறு அந்த சிலைகளை வழிபடுவதன் மூலம் வீடு சுபிட்சமாக இருக்கும் மற்றும் அவர்கள் நினைத்ததெல்லாம் கிடைக்கும். அந்த வகையில் காமதேனு பசு கன்றுடன் கூடிய ஒரு சிலையை வீட்டில் வாங்கி வையுங்கள் ஒருவேளை உங்களால் சிலை வாங்க முடியவில்லை என்றால் காமதேனு படத்தை வாங்கி பிரேம் செய்து பூஜை அறையில் வைத்து தினமும் பால் அபிஷேகம் செய்யுங்கள்.

அதனைத் தொடர்ந்து பசு மாட்டின் கொம்பு நெற்றி கால்கள் கன்று மடி இவற்றிற்கு சந்தனம் குங்குமம் வைத்து மல்லிகை பூவை காம தீபத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் காமத்தை தொட்டு அதன் பின் நீங்கள் காமதேனுவை தொட்டு வணங்கி உங்களுடைய கோரிக்கையை வைத்தால் உடனடியாக நடக்கும்.

இதையும் படிங்க: இந்திரனின் சாபத்தால் தான் மாதவிடாய் வந்ததா? பீரியட்ஸுக்கு பின்னால இப்படி ஒரு உண்மையா??

உங்கள் வீட்டில் செல்வம் பெறுக உயர காமதேனுவே வீட்டில் வைத்து வழிபாடு செய்யுங்கள். இவ்வாறு நீங்கள் வழிபட்டு வந்தால் உங்கள் வீட்டில் பண வரவு அதிகமாகும் பல நல்ல விஷயங்கள் நடக்கும். காமதேனுவை நீங்கள் "ஓம் சுபகாயை வித்மஹே காம்தாத்திரியை சதீமக்ஹி தந்னோ தேனு ப்ரசோதயத்" என்ற மந்திரம் சொல்லி வழிபட வேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலம் நீங்கள் அதிக நன்மைகளை பெறுவீர்கள். இந்த மந்திரத்தை சொல்லும் என் காமதேனு சிலை மீது உங்கள் கைகளை வைத்து சொல்லி வரவும். குறிப்பாக இந்த மந்திரத்தை நீங்கள் தினமும் 54 முறை சொல்ல வேண்டும். இதனால் உங்களுக்கு எல்லா விதமான நன்மைகளும் செல்வங்களும் கிடைக்கும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Meenakshi thirukalyanam 2026 மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2026 தாலி சரடு மாற்ற நல்ல நேரமும், வீட்டில் வழிபடும் முறையும்
கல்லடுக்கும் கனவு இல்லம்: கோவில்களில் கல் அடுக்கினால் சொந்த வீடு அமையுமா?