கான்கிரீட் தரைகள் நீண்ட காலம் பயன்படுத்தப்பட வேண்டுமா? இதோ டிப்ஸ்…

Asianet News Tamil  
Published : May 29, 2017, 01:55 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
கான்கிரீட் தரைகள் நீண்ட காலம் பயன்படுத்தப்பட வேண்டுமா? இதோ டிப்ஸ்…

சுருக்கம்

Tips for use concrete floors long life

 

உங்கள் அத்தனை சிக்கல்களையும் தீர்க்க வந்துவிட்டது ரெட்ரோ பிளேட் 99.  இது என்ன என்று புரியவில்லையா? புதிய கான்கிரீட் தரையாக இருந்தாலும் சரி..பழைய கான்கிரீட் தரை என்றாலும் சரி.

ரெட்ரோ பிளேட் 99, பளபளப்பான கான்கிரீட் பரப்பை உருவாக்கிக் கொடுக்கும். நீங்கள் இதுகாறும் அனுபவித்து வந்த தொல்லைகள் எதுவும் இருக்காது.

ரெட்ரோ பிளேட் 99இல் இடம்பெற்றுள்ள வேதிப் பொருட்கள் ஈரத்தன்மையை நீண்ட காலம் நிலைநிறுத்துகின்றன. இதனால் கான்கிரீட் கலவையைக் குலுக்கிவிடுவதற்கான தேவை குறையும். கான்கிரீட் பரப்பில் ஈரம் நிலைநிறுத்தப்படுவதால் கட்டுமானக் கலவை நன்றாக உள்ளிழுக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

ஆவியாவதால் ஏற்படும் இழப்பு குறைக்கப்படுகிறது. தரைப்பரப்பு எந்த அளவுக்கு பளபளப்புக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்கேற்ற வகையில் தேய்த்துப் பளபளப்பாக்கும் உத்திகளைப் பின்பற்றலாம்.தரையின் தேய்
மானத்தைக் கட்டுப்படுத்தலாம்.

உராய்வுகளால் ஏற்படும் சேதத்தை எதிர்க்கும் திறனை நான்கு மடங்கு வரை அதிகப்படுத்தலாம். தரையின் மீது படும் ஒளியைத் திருப்பிப் பிரதிபலிக்கும் திறன் 30 விழுக்காடு வரை கூடுதலாகும்.

இதனால் குறைந்த எண்ணிக்கையிலான விளக்குகளை எரித்தாலும் நல்ல வெளிச்சம் கிடைக்கும். மின்சாரத் தேவை குறையும். கட்டணத்தில் சிக்கனம் ஏற்படும்.

பழைய தரைகளைப் புத்தம் புதியதைப் போல் மாற்றி  அமைக்கலாம். குறைந்தபட்சப் பராமரிப்பே போதுமானதாக இருக்கும். தரையின் மீது கனமானபொருட்களை இழுத்துச் செல்வதால் ஏற்படும் கீறல்கள் தோற்றத்தின் அழகைக் கெடுக்காத வகையில் தவிர்க்கப்படும்.

கறைகள் படிவதும் மட்டுப்படுத்தப்படும். இதனால் தரைகள் எப்போதும் பளிச்சென்று சுத்தமாகவே வைத்துக் கொள்ளப்படும். நீண்ட கால உழைப்பையும் உறுதி செய்யலாம். குறைந்த செலவில் பயன்படுத்தலாம்.

விற்கப்படும் நிலையில் வாங்கி வருவதை வேறு வகைகளில் நீர்ப்பதற்கும் அவசியம் இல்லை. அப்படியே தயார் நிலையில் பயன்படுத்தக் கூடிய விதத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தரையின் உறுதியை இறுக்கம் மிகுந்ததாக ஆக்குகிறது.

கண்ணுக்குத் தெரியாமல் ஆவியாகிக் காற்றில் கலக்கும் நச்சுப் பொருள் வகை எதுவும் ரெட்ரோபிளேட்டில் கிடையாது. இதனால் உடல் நலத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. பதினைந்து வருட காலத்திற்கு உத்தரவாதமும் தருகிறார்கள்.

பசுமைக் கட்டுமான விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. எனவே பசுமைக் கட்டுமான தரச்சான்று பெறுவதில் தடை இருக்காது.

PREV
click me!