
சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது குறித்து மார்ச் 20 க்குள் முடிவு வெளியிடப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக சசிகலாவும் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் பதவியேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது சசிகலாவுக்கு எதிராக பல குற்றசாட்டுகளை முன் வைத்தார். அதையடுத்து பல கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், சசிகலா ஒ.பி.எஸ்ஸிடம் ஐக்கியமானவர்களை கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் நீக்குவதாக அறிவித்தார்.
இதுகுறித்து பதிலளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கான விளக்கத்தை சசிகலா தேர்தல் ஆணையத்தில் அளித்தார்.
மேலும் அதிமுக சட்ட விதிகள் படியே முடிவுகள் எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.