தினகரனுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அவரு சுயவிளம்பரத்துக்காக இதை செய்றார்!: யார், யார் சொன்னது?

Asianet News Tamil  
Published : Mar 31, 2018, 09:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
தினகரனுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அவரு சுயவிளம்பரத்துக்காக இதை செய்றார்!: யார், யார் சொன்னது?

சுருக்கம்

why dinakaran getting much attention than others said various political leaders

உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு  இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே. 

அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி.

*    ”காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க. எதுவுமே செய்யவில்லை! என்று கூற தி.மு.க.விற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. இவ்வளவு சிக்கல்களுக்கும் தி.மு.க.தான் காரணம்.”
-    மா.ஃபா.பாண்டியராஜன். 

*    ஒரு திட்டரில் ஆயிரம் பேர் பார்த்த படத்தை இப்போது இருநூறு பேர்தான் பார்க்கின்றனர். அவர்களிடம் ஆயிரம் பேர் பார்க்கும் பணத்தை வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?

-    ஆர்.கே.செல்வமணி

*    ஸ்டெர்லைட் ஆலை குறித்த விவகாரத்தில், தமிழக மக்கள் பாதிக்கப்படாத வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அந்த நிர்வாகம் ஒதுக்கியுள்ள, நூறு கோடி ரூபாய் நிதியிலிருந்து மக்கள் பிரச்னை தீர்விற்காக முப்பத்தைந்து கோடி ரூபாய் பயன்படுத்தப்படும்.

-    கே.சி.கருப்பணன்

*    காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசை தமிழக அரசு எதிர்த்தால் மறுநாள் யாருக்கும் அமைச்சர் பதவி இருக்காது. 

-    துரைமுருகன்

*    தமிழகத்தின் உரிமையை, பி.ஜே.பி.தான் மீட்டெடுக்கும், என தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். தமிழக அரசியலில் மற்றவர்கள் தொலைத்த உரிமையை நாங்கள் மீட்டெடுப்போம். 

-    தமிழிசை 

*    அ.தி.மு.க.வின் ஐம்பது எம்.பி.க்களும் ராஜினாமா செய்தால், நாங்களும் செய்ய தயார். அதேபோல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால், நாங்களும் அடுத்த நிமிஷமே செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் இதற்கான தைரியமும், தெம்பும் அவர்களுக்கு இல்லை.

-    ஸ்டாலின் 

*    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இறுதி நாள் வரை காத்திருந்துவிட்டு, எங்கே தங்களது தலைக்கு ஆபத்து வந்துவிடுமோ! என மக்களை ஏமாற்றுவதற்காக உண்ணாவிரதம் நடத்துகிறது அ.தி.மு.க. இதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

-    தினகரன்

*    டி.டி.வி. தினகரனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்பட தேவையேயில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் டி.டி.வி.தினகரன் என்ற பெயரே இன்றைய அரசியலில் இருந்திருக்காது. 

-    தீபா

*    எனக்கு எலிமருந்து அனுப்பியவர் தனது சுய விளம்பரத்துக்காக இப்படி செய்துள்ளார். அவர் மீது நான் புகார் செய்யவில்லை. 

-    மகேந்திரன் எம்.பி.

*    தமிழக அரசியலில் காலி இடம் இருக்கிறது! என்று சொல்லி சிலர் புறப்பட்டுள்ளனர். காலி இடமெல்லாம் எல்லாம் நிரப்பப்பட்டுள்ளது. அவர்கள் வேறு மாநிலம் சென்று பார்க்கலாம்.

-    எடப்பாடி பழனிசாமி. 

 

PREV
click me!

Recommended Stories

Vijay - Seeman: உருவாகிறதா சீமான் - விஜய் கூட்டணி? முன்னணி நடிகர் நடத்திய பேச்சு வார்த்தையில் கிரீன் சிக்னல்.!
மீண்டும் அதிமுகவில் சசிகலா?! சின்னம்மாவுக்கு கவுரவ பதவி வழங்கி எல்லாத்தையும் சரிகட்டும் இபிஎஸ்!