வாக்காளர்களை நாய்கள் என கேவலமாக பேசிய நெல்லை கண்ணன் …! தீவிரவாத பேச்சால் அதிர்ச்சி !!

Selvanayagam P   | others
Published : Dec 31, 2019, 11:07 AM IST
வாக்காளர்களை நாய்கள் என கேவலமாக பேசிய நெல்லை கண்ணன் …!  தீவிரவாத பேச்சால் அதிர்ச்சி !!

சுருக்கம்

2 கோடி பேருக்கு வேலை தருவேன்.. 15 லட்சம் ரூபாய் அக்கௌண்ட்ல போடுவேன் என்று மோடி சொன்னதை நம்பி இந்த நாய்கள் அவருக்கு ஓட்டப் போட்டு போட்டு விட்டார்கள் என வாக்காளர்களை காங்கிரஸ் பிரமுகர் நெல்லை கண்ணன் கேவலமாக பேசி அதிர்ச்சி அளித்துள்ளார். 

நெல்லை கண்ணன் தமிழகத்தில் உள்ள சமய சொற்பொழிவாளர்களுள் முக்கியமானவராக கருதப்படுகிறார். ஆனால் அவரது பேச்சில் எப்போதுமே நாகரீகம் இருந்தது கிடையாது. யாராக இருந்தாலும் அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேசுவதோடு மட்டுமல்லாமல் தன்னைவிட புத்திசாலி வேறு யாரும் கிடையாது என்கிற ரீதியில் பேசுவார். 

மேலும் தனது ராமாயண சொற்பொழிவில் ராமன், ராவணன் உள்ளிட்ட பாத்திரங்களையும்  அவன் இவன் என்றுதான் சொல்லுவார். அண்மையில் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை  அவன், இவன் என்று ஒரு பேட்டியில்  மரியாதைக்குறைவாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் நெல்லையை அடுத்த மேலப்பாளையத்தில் தவ்ஹித் ஜமாத் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் நெல்லை கண்ணன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

நெல்லை கண்ணன் பேசும் போது, மோடி முதல் முறை பிரதமரான போது, 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்றும், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என தெரிவித்தார்.

அதை நம்பி  இந் நாய்கள் ஓட்டுப் போட்டாய்ங்க… ஏமாளிப்பயல்கள்… ஆனால் தமிழ்நாட்டுக் காரங்க விவரமானவங்க…அவங்க ஏமாறமாட்டாங்க… ஆனால் வட நாட்டு மக்கள் எல்லாம் மோடியில் ஏமாத்துப் பேச்சை நம்பி  ஓட்டுப் போட்டுடாய்ங்க என வாக்காளர்களை கேவலாமாக நாய்கள் என்று பேசினார்.

தற்போது நெல்லை கண்ணன் மீது வன்முறையைத் தூண்டியதாகவும், கொலை முயற்சி பேச்சு பேசியதாகவும் தமிழக பாஜக  போலீசில் புகார் அளித்துள்ளது. இதையடுத்து நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!
திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கு! - ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு