இபிஎஸ் ஆட்சியை தூக்கி எரிந்தது எங்களால் தான்! அதேபோல உங்கள் ஆட்சியையும்!ஸ்டாலினுக்கு கெடு விதித்த வேல்முருகன்?

By vinoth kumarFirst Published May 30, 2023, 6:47 AM IST
Highlights

திமுக ஆட்சி அமைக்க வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தவர்கள் இஸ்லாமிய மக்கள். பேரறிவாளன் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டது போல் ஜனநாயக அடிப்படையில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். 

எங்களது கோரிக்கையை நிறைவேற்ற தவறினால் ஜுன் மாதம் இறுதியில் அரசுக்கு எதிராக கோட்டை நோக்கி பேரணியாக செல்வோம் என வேல்முருகன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான வேல்முருகன்;- ஜுன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் 37 ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் இஸ்லாமியர்களை விடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திமுக ஆட்சி அமைக்க வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தவர்கள் இஸ்லாமிய மக்கள். பேரறிவாளன் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டது போல் ஜனநாயக அடிப்படையில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். தேர்தலுக்கு முன்பாக ஆயுள் கைதிகளாக இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டுமென போராட்டம் நடத்திய போது அதில் திமுகவின் முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டு ஆதரவு தெரிவித்த நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு அது குறித்து பேசாமல் இருப்பது எந்த வகையில் நியாயம்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது எங்கள் கூட்டமைப்பு முன்னெடுத்த போராட்டங்களால் தான் அந்த ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அந்த நிலைக்கு எங்களை நீங்களும் தள்ளிவிட வேண்டாம் என எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

எங்களது கோரிக்கையை நிறைவேற்ற தவறினால் ஜுன் மாத இறுதியில் அரசுக்கு எதிராக கோட்டை நோக்கி பேரணியாக செல்வோம் என வேல்முருகன் கூறியுள்ளார். திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தாலும் திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

click me!